• Sep 21 2024

பாக்கியாவை வீட்டுக்கு அழைக்க சென்ற ஈஸ்வரி-கோபியை பார்த்து இனியா கேட்ட கேள்வி – இன்றைய எபிசோட் அப்டேட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்பு உச்சத்தில் செல்லும் சீரியல் தான் பாக்கிலட்சுமி தொடர்.தற்போது எல்லா உண்மைகளும் தெரிந்து அடுத்து என்ன நடக்கப்போகின்றது என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்….

வீட்டுக்கு வந்த இனியா எவ்வளவு அழைத்தும் அண்ணா வரவில்லை என்னை போக தான் சொல்றாங்க. என சொல்லி அழுகிறாள். இதனை அடுத்து ஈஸ்வரி இப்படியே இருந்தா பிரச்சனையை எப்படி சரியாகும் நானே போய் பாக்யாவை கூப்பிட்டு வருகிறேன் என எழிலை அழைத்துக் கொண்டு செல்கின்றார்.

பின்னர் மயூரா கோபிக்கு போன் போட்டு நாங்க ரொம்ப தூரம் போக போறோம் எல்லோருக்கும் பாய் சொல்லிட்டேன். உங்ககிட்ட போன்ல பேசுறது பார்த்தா அம்மா திட்டுவாங்க. இப்போ அவங்க பக்கத்துல இல்ல அதனால தான் உங்களுக்கு போன் பண்ணேன் என சொல்ல கோபி மயூராவிடம் சாரி கேட்டு கண்டிப்பா உன்ன பார்க்க வருவேன் உங்க அம்மா கொஞ்சம் கோபத்தோட பிடிவாதமா இருக்கா. அவளுடைய கோபம் குறைந்ததும் கண்டிப்பா நான் வருவேன் என கூறுகிறார்.

பிறகு கோபி வெளியே எழுந்து வந்த போது இனியா அழுது கொண்டிருப்பது போல தாக்கம் கேட்டு உள்ளே சென்று அவரை சமாதானம் செய்கிறார். ஆனால் இனிய அம்மா வரவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க நான் எதை கேட்டாலும் அம்மா உடனே செய்வாங்க ஆனா இப்போ அவங்க வேற மாதிரி இருக்காங்க ரொம்ப ஸ்ட்ராங்கா சொல்லிட்டாங்க.மேலும் அவங்க இங்க வரவே மாட்டாங்க போல என அழுகிறாள்.

கோபி எவ்வளவு சொல்லியும் கேட்காத இனியா எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம் உங்களை பார்க்கவே பிடிக்க வில்லை வெளியே போங்க என வெளிய அனுப்புகிறார்.
மேலும் இந்தப் பக்கம் ஈஸ்வரியை பார்த்தது பாக்யா அத்தை என கட்டிப்பிடித்து கதறி அழுகிறாள். ஈஸ்வரி அழாத பாக்கியா என சமாதானப்படுத்த முயற்சி செய்தும் பாக்யா அழுகையை நிறுத்தவில்லை.

நீ இல்லாம வீடு நல்லா இல்லை மாமா மாத்திரை கூட போட மாட்டாரு, செழியன் வேலையை செய்யாமல் அப்படியே உட்கார்ந்துக்கிட்டு இருக்கான். உன் கூடவே இங்கேயே இருக்கான். இனியா ஸ்கூலுக்கு போகாம இருக்கா என சொல்கிறார்.

கோபி பண்ணது பெரிய தப்பு தான் அவன என்னால மன்னிக்கவே முடியாது ஆனால் இது எல்லார் வீட்டிலேயும் நடக்கிறது தான். ஆம்பளைங்க அப்படி இப்படி இருக்கத்தான் செய்வாங்க என ஈஸ்வரி பேச பாக்யா அதிர்ச்சியாகி பார்க்கின்றார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement