தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை இயக்கி இயக்குநராக வலம் வருபவர் ஷங்கர். இவர் தற்பொழுது ராம்சரண் நடிக்கும் ஆர்சி 15 படத்தை இயக்கி வருகின்றார்.இப்படத்தில் ராம் சரணுடன் கியாரா அத்வானி, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்காக ராம் சரணிற்கு 100 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.இந்நிலையில் தனது கனவு படம் பற்றி ஷங்கர் சமீபத்தில் பேசி உள்ளார். 1000 கோடி பட்ஜெட்டில் ராம் சரண், ஹிருத்திக் ரோஷன் ஆகியோரை வைத்து மெகா பட்ஜெட் படம் இயக்குவது தான் தனது கனவு என தெரிவித்துள்ளார். இந்த படத்தை தண்ணீருக்கு அடியிலேயே முழுக்க முழுக்க எடுக்க திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர்.
இது இந்தியா சினிமாவிற்கே மிக பெரிய அங்கீகாரமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்தாலும், விரைவில் இந்தியன் 2 ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் ஷங்கர், ஆர்சி 15, கனவு படம், அந்நியன் இந்தி ரீமேக் என பிளான் செய்து கொண்டிருப்பதால் இந்தியன் 2 படம் மீண்டும் தொடங்கப்படுமா, படம் ரிலீசாகுமா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
அடுத்தடுத்த படங்கள் பற்றி பேசும் ஷங்கர், ஏன் இந்தியன் 2 படம் பற்றி எதுவும் பேச மறுக்கிறார். கமலே சமீபத்தில் இந்தியன் 2 விரைவில் துவங்கப்படும் என சொல்லி விட்டார். ஆனால் சம்பந்தப்பட்ட டைரக்டர் படம் பற்றி வாய் திறக்க மறுக்கிறார் என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளதைக் காணலாம்.
பிற செய்திகள்
- சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்- டீ கிளாஸ்,மற்று காப்புடன் வெளியாகிய அப்டேட்
- பிரமாண்டாக நடைபெற்ற மஹா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா- கியூட்டாக இருக்கிறாங்களே ஹன்சிகா
- நம்ம நடிகை குஷ்புவா இது- ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கிற மாதிரி அழகாக இருக்கின்றாரே
- நடிகர் சல்மான்கானை கொலை செய்ய 4 லட்சம் ரூபாயில் துப்பாக்கி வாங்கிய கும்பல்- வெளியாகிய திடுக்கிடும் தகவல்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!