• Sep 20 2024

காலைல 4 மணி என்றாலே ரமணியம்மாள் வீட்டுக்கு போய்டுவாங்க- கண்ணீர் மல்க காரணத்தைச் சொன்ன அர்ச்சனா

stella / 1 year ago

Advertisement

Listen News!


1954 ஆம் ஆண்டு சென்னை, மேற்கு மாம்பலம் பகுதியில் பிறந்தவர் தான் ரமணியம்மாள்.ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு ஏகப்பட்ட போட்டியாளர்களை வீழ்த்தி டைட்டிலையே தட்டித் தூக்கியவர். இந்த நிலையில் இவர் நேற்றைய தினம் எதிர்பாராத விதமாக இறப்புக்குள்ளானார்.

ரமணியம்மாள் கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் வீட்டு வேலை செய்து கஷ்டப்பட்டு உழைத்து வந்ததாக ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும், பாடகியாக மாறிய பின்னர் தனது உழைப்பால் சொந்தமாக வீடு கட்ட நிலம் ஒன்றையும் வாங்கி இருந்தார்.


ரமணியம்மாள் மறைவு இசை உலகத்தையும் சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தி உள்ளது. பலரும் அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என ஆழ்ந்த இரங்கல்களை கூறி வருகின்றனர்.


இப்படியான நிலையில் நேற்றைய தினம் இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற அர்ச்சனா கூறியதாவது ரமணிப் பாட்டி பற்றி சொல்லனும் என்றால் அவர் எல்லோருக்கும் பாட்டி தான்,அவரைப் பற்றி சொல்லணும் எனறால் அவருக்கு அவருடைய குடும்பம் தான் எல்லாமே எங்க ஷுட்டிங் போனாலும் காலைல 4 மணிக்கு விட்டிடுங்கடா என்று சொல்லுவாங்க. என் சின்ன பையனுக்க டீ ஏற்றிக் கொடுக்கணும் என்று சொல்வாங்க. ஷு தமிழில் சரிகமப நிகழ்ச்சி இவ்வளவு ஹிட்டாவதற்கு அவர் தான் முக்கிய காரணம் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement