தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும் நடிகருமாக வலம் வருபவர் பார்த்தீபன். இவர் தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் . சமூக வலைத்தளங்களில் "காதல் " குறித்து கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனது நடிப்பில் மூலமும் திரைப்படங்களை இயக்கியும் நல்வரவேற்பை பெற்றார். அன்றைய கால கட்டத்தில் அதிகம் ரசிகர்களால் கொண்டாடப்பட நடிகர்களில் இவரும் ஒருவர் என்றே கூற முடியும். தற்போது துணைவேடங்களிலும் வில்லனாகவும் நடித்தும், திரைப்படங்களை இயக்கியும் வருகின்றார். இவர் "காதல்" குறித்து கூறிய விடயம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
இப்போது "என்னை விரும்பின பெண் வேறு ஒருவரை விரும்புகின்ற அதற்கு பல காரணம் இருக்கலாம். என்கிட்ட எதாவது பிரச்சனை இருக்கலாம்,முரண்பாடாக இருக்கலாம், அதிக நேரம் செலவிட முடியாமல் இருக்கலாம். அதனால் நேரம் செலவிடுகின்ற வேறு ஒருவர் அந்த பெண்ணுக்கு கிடைத்திருக்கலாம்.
அப்போது எப்படி விலகி போவது என்ற குழப்பத்தில் இருக்கும் போது அந்த விடயம் எனக்கு தெரிய வரும் போது நானே வழிவிட்டு தாயே சந்தோசமா நீ போய்ட்டு வா என்று கூறுவேன்" எனக் கூறினார். இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!