• Jun 02 2025

கருடன் எனும் பறவை இன்னும் மக்கள் மனதில் நிலைத்திருக்கிறது.. சூரியின் நெகிழ்ச்சியான பதிவு.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

பிரபல காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த சூரி, ‘கருடன்’ படத்தின் மூலம் கதாநாயகன் என்ற தனித்துவமான பட்டத்தைப் பெற்றார். இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி, கடந்த ஆண்டு 2024 மே 31ம் திகதி வெளியான இந்த திரைப்படம், இன்று முதலாவது ஆண்டு நினைவுநாளைக் கொண்டாடுகிறது.


இந்த சந்தர்ப்பத்தைத் தொடர்ந்து, நடிகர் சூரி தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப்  பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் இதைப் பார்த்ததும், “அண்ணா நீங்க ரொம்பவே வித்தியாசமானவர்..!” என்று பாராட்டி வருகின்றனர்.

‘கருடன்’ படம் ஒரு சமூகக் கதையை அடிப்படையாக கொண்ட சினிமாவாக இருந்தாலும், அதில் வரும் உணர்ச்சி, நட்பு, மனித நேயம் மற்றும் காவல்துறையின் சிக்கல்கள் எனப் பல பரிமாணங்களை விவாதிக்கும் வகையில் அமைந்திருந்தது. 


இந்தப் படத்தில் சூரிக்கு துணையாக, சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தன், ஷிவதா நாயர், ரோஷினி ஹரிபிரியன், வடிவுக்கரசி மற்றும் ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப் படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த பாடல்கள், ரசிகர்களின் நினைவில் இன்னும் அப்படியே இருக்கின்றன.

தற்போது இந்தப் படம் வெளியாகி ஒரு வருடம் ஆனதை முன்னிட்டு, நடிகர் சூரி தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட உருக்கமான பதிவு அனைவரையும் கவர்ந்துள்ளது. “அது உங்கள் அன்பால் உயிர் பெற்ற உணர்வு. இந்த ஒரு ஆண்டு எனக்கு வாழ்நாள் வரைக்கும் நினைவாக இருக்கும். உங்கள் ஆதரவும் நம்பிக்கையும் என்றைக்கும் என் உள்ளத்தின் ஆழத்தில். மிக்க நன்றி.” என்று உருக்கமாக பகிர்ந்திருந்தார். 

‘கருடன்’ படம் தியட்டரில் ஓடிய பின்னர், Amazon Prime Video மற்றும் சன் NXT போன்ற OTT தளங்களில் வெளியானது. அதனால் தான், சமூக சிக்கல்கள் மற்றும் உணர்வுகளைக் காட்டிய அந்தப் படம், வீடு தோறும் மழை போல பரவியது  என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement