• May 20 2024

'அந்த நடிகரை பதம் பார்க்க ஆசை' - பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் சர்ச்சை பேச்சு.. அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்ஸ்..!

Jo / 11 months ago

Advertisement

Listen News!

சமீப காலங்களில் வெள்ளித்திரை நடிகைகளை காட்டிலும் சின்னத்திரை நடிகைகளுக்கு தனி மவுசு உருவாகியுள்ளது. அவர்கள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் அப்லோட் செய்யும் புகைப்படங்கள், சீரியல்களில் ஷூட்டிங்கின் போது எடுக்கப்படும் காட்சிகள், அனைத்தும் ரசிகர்களை தங்கள் பக்கம் திருப்பும் முயற்சியில் உள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் பல நடிகைகள் நடித்து வருகின்றனர். 

இப்படி ஒவ்வொரு வாரமும் பல திருப்பங்களோடு பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், தற்போது இந்த சீரியலில் நடித்த பிரபலம் பாலிவுட் நடிகரை பதம் பார்க்க ஆசை என கூறியது தான் பெரும் பேச்சாக உள்ளது. பாக்கியலட்சுமி சீரியலின் மூலமாக தனது கேரியரை நிலை நிறுத்திக்கொண்ட நடிகை ரேஷ்மா பசுப்புலெட்டி ராதிகா கதாபாத்திரத்தில் கச்சிதமாய் பொருந்தியுள்ளார்.

இவர் இரண்டு முறை திருமணம் செய்துக்கொண்டு விவாகரத்தான நிலையில், தற்போது சமூக வலைதளத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் இவர் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர், நான் உங்களை பதம் பார்க்க வேண்டும் என கமெண்டில் பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த ரேஷ்மா மிகவும் கூலாக ஒரு பதிலடியை கூறியுள்ளார். அதில் எனக்கும் கூட பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரை பதம் பார்க்க ஆசை, ஆனால் என்ன செய்வது அது முடியாத ஒன்று என தெரிவித்துள்ளார். இந்த பதிலை பார்த்த நெட்டிசன்கள் ரேஷ்மாவை கண்டு அதிர்ந்து போயுள்ளனர். மேலும் இவ்வளவு ஓபனாக எந்த ஒரு நடிகையும், ஒரு நடிகரை பதம் பார்க்க வேண்டும் என கூறமாட்டார் என்றும் அவரை நெட்டிசன்கள் விமர்சித்தும் வருகின்றனர்.

Advertisement

Advertisement