• Sep 20 2024

ஷோபாவை பலமுறை அடித்திருக்கிறேன்: விஜய்யின் அப்பா கூறிய விடயம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் தான் எஸ்.ஏ.சந்திரசேகர்.இவர் நடிகர் விஜய்யின் தந்தையுமான இவர் சமீப காலமாக 'யார் இந்த எஸ்.ஏ.சி'.என்ற பெயரில் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். இதில் தனது வாழ்க்கை வரலாறு மற்றும் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை ரசிகர்களிடத்தே பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போதையா வீடியோவில் தனது திருமணம் குறித்து பேசியுள்ள எஸ்.ஏ. சந்திரசேகர், 70-களின் இறுதியில் என்க்கு திருமணம் நடைபெற்றது.மேலும் அப்போது ஒரு சினிமா ஷூ-ட்டிங்கில் எனது மாமா நடிகர் சிவாஜியிடம் எனது திருமணத்திற்கு தலைமை தாங்கி நடத்தி கொடுக்கும்படி கூறினார். அதை ஏற்றுக்கொண்ட சிவாஜியும் தான் வருவதாக சம்மதித்தார்.

அதன்பின்னர் நான் திருமண வேலைகளை கவனித்துக்கொண்டே உதவி இயக்குநராக பணியாற்றி வந்ததேன். அந்த காலத்தில் கைலாஷ் சில்க்ஸ் என்ற ஒரு கடை உண்டு ஏழைகள் துணி எடுத்துக்கொண்டு தவணை முறையில் பணம் செலுத்தலாம். அப்போது நான் எனது திருமணத்திற்கு துணி எடுக்கும்போது எனக்கு 50 ரூபாக்கு கோட் ஷோபாவுக்கு 100 ரூபாய்க்கு புடவை தவனை திட்டத்தில் எடுத்தேன்.

மேலும் திருமணத்திற்கு முதல்நாள் வரை நான் ஷூட்டிங்கில் இருந்தேன். அப்போது சிவாஜி என்னிடம் வந்து என்னடா நாளைக்கு திருமணமா என்று கேட்டார். நான் ஆமான்னா என்று சொல்லிவிட்டு கூடவே கமலாம்மா (சிவாஜி மனைவி )தாலி எடுத்துக் கொடுத்தா நல்லாருக்கும் என்று கூறினேன். அப்போ நான் எடுத்து கொடுத்தா நல்லா இருக்க மாட்டியா என்று கேட்டார்.

அதன்பின்னர் சிவாஜி அண்ணானிடம் உங்கள் தலைமையில் அம்மா தாலி எடுத்து கொடுக்கட்டும் என்று கூறினேன். அவரும் சம்மதம் தெரிவித்தார். திருமண நாள் வந்தது. எனது அம்மா அண்ணன் எல்லாரும் வந்தார்கள் ஆனால் கடைசி வரை என் அப்பா வரவே இல்லை. கமலாம்மா தாளி எடுத்து கொடுக்க நான் ஷோபா கழுத்தில் கட்டினேன்.

அத்தோடு 5 வருடங்கள் காதலித்தேன். இப்போது தாலி கட்டிவிட்டேன். ஆனால் ஷோபா எனது மனைவி இல்லை. திருமணமான முதல்வருடம் விஜய் பிறந்தான் அப்போதும் ஷோபா எனது மனைவி இல்லை விஜய்க்கு அம்மா என்ற ஸ்தானத்தில் இருந்தாள். அடுத்த 5 வருடங்களில் வித்யா பிறந்தாள் அப்போதும் விஜய் மற்றும் வித்யாவின அம்மா ஸ்தானத்தில் தான் ஷோபா இருந்தார்.

அவள் எனக்கு மனைவி இல்லை என்று சொன்னதால் தவறாக நினைத்துவிடாதீர்கள். திருமணமானாலும் நாங்கள் காதலர்களாக இருக்கிறோம் என்று கூறுகின்றேன். நான் முரட்டு பையன், கோபக்காரன் என்று சொல்வார்கள் ஆனால் நான் எப்படிபட்டவன் என்பது ஷோபாவுக்கு மட்டும் நன்றாக தெரியும். பலமுறை அவளை நான் அடித்திருக்கிறேன். வேறு ஒருவராக இருந்தால் என்னை விட்டு சென்றிருப்பார். ஆனால் ஷோபா அப்படி இல்லை அவள் இல்லாமல் நான் இல்லை. நான் இல்லாமல் அவள் இல்லை.

அடித்துவிட்டாளும் நாள் அவளிடம் சென்று மன்னிப்பு கேட்பேன்.அத்தோடு உடனே அவள் அனைத்தையும் மறந்துவிட்டு புது காதலனாக என்னை ஏற்றுக்கொள்வாள். என்னுடைய எனர்ஜியே அவள்தான். கடவுளிடம் ஒன்று வேண்டிக்கொள்கிறேன். அவளது காதலனாக இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கடைசிவரை காதலனாக இருக்க வேண்டும். இவ்வாறு அந்த காணொளியில் மனைவி ஷோபா குறித்து நெகிழ்ச்சியாக கூறியுள்ளார் எஸ்.ஏ. சந்திரசேகர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement