• Sep 21 2024

எனக்கு அந்த பழக்கம் இல்லை ஆனால் மனைவி செய்தால் அதை எடுத்து பார்ப்பேன்- அருள்நிதியின் சுவாரஸியமான பேட்டி

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் டைரி. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்த நிலையில் இப்படம் குறித்து பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது அருள் நிதியிடம் இப்படத்தில் உங்கள் கதாபாத்திரத்தின் பெயரை அரசியலாக பார்க்கிறீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய அவர் படத்தில் எனது கதாபாத்திரத்தின் பெயர் வரதா அண்ணாத்துரை


 அண்ணாதுரை என்ற பெயர் எனது கதாபாத்திரத்திற்கு அமைந்தது ரொம்ப சந்தோஷம். இதை நான் அரசியலாக பார்க்கவில்லை. பொதுவாக அண்ணா என்றால் அனைவருக்கும் பிடிக்கும். எனது அப்பா, நான் சிறுவயதாக இருக்கும்போதே 'அண்ணா தாத்தா' என்று தான் அழைக்க வேண்டும் என்பார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர் நான் படப்பிடிப்பின்போது யாருடனும் பேச மாட்டேன். மற்றவர்களின் வேலையை தொந்தரவு செய்ய மாட்டேன். மற்ற சமயங்களில் ஜாலியாக இருப்பேன்.எனக்கு டைரி எழுதும் பழக்கம் கிடையாது. ஆனால் எனது மனைவி என்னுடன் கோபித்துக் கொண்டு டைரி எழுதுவார். அதை படிக்கும் பழக்கம் உண்டு என்று நக்கலாக கூறியுள்ளார்.


Advertisement

Advertisement