• May 20 2024

“மணிரத்னம் படத்தில் நடித்தது என் அதிஷ்டம் எனக் கருதுகின்றேன்“- அனுபவத்தைப் பகிர்ந்த ஜெயம் ரவி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் பிரமாண்ட இயக்குநரான மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்தப் படத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அத்தோடு இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குநர் மணிரத்னத்தின் படங்களில் பணிபுரிந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அதாவது இந்திய சினிமாவில் உள்ள அனைத்து நடிகர்களும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க விரும்புவார்கள். மணிரத்னத்தின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம் என்றும், இது மிகப்பெரிய சாதனை என்றும் கருதுகிறேன்.

மேலும் மணிரத்னத்தின் படத்தைப் போல ஒழுக்கமான வேறு எந்தப் படத்தையும் பார்த்ததில்லை படப்பிடிப்பின் போது அனைவரும் அதிகாலை 03:30 மணிக்கு எழுந்து கொள்வோம். அது போல சரியாக 06:00 மணிக்கு படப்பிடிப்புக்கு அனைவரும் வந்து விடுவார்கள் என்றும் புகழ்ந்து கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, அர்ஜுன், ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர். ​​படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது படத்தின் இசை வேலைகளும் நடந்து வருகிறது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement