• Apr 30 2024

'நடிப்பு என்பது சலிப்பான விடயம் என்று தவறாக நினைத்திருந்தேன்'- அனுபவத்தைப் பகிர்ந்த செல்வராகவன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். இயக்குநராக இருந்த இவர் இப்படத்தின் மூலமே நடிகராக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக்காயிதம் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் அறிவிப்பு வெளியாகிய நாளிலிருந்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகக் காணப்படுகின்றது.

படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட உள்ளனர். மே 6 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை வெளியாகி கவனத்தைப் பெற்றன.

இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் படத்தில் நடித்தது பற்றி தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் முக்கியமாக “சாணிக்காயிதம் படத்தில் நடிப்பதற்கு முன்பாக நான் நடிப்பு என்பது மிகவும் சலிப்பான விஷயம் என தவறாக நினைத்திருந்தேன்” எனக் கூறியுள்ளார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement