• Apr 30 2024

திடீரென கோடிக்கணக்கில் சம்பளத்தை உயர்த்திய கேஜிஎப் இயக்குநர் -அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் ஒரு சில படங்கள் மூலமே தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குநர் பிரஷாந்த் நீல்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இவர் இயக்கத்தில் வெளியான கேஜிஎப் 2 படம் தற்போது 1000 கோடி ருபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது. இவ்வளவு பெரிய சாதனை படைத்து இருக்கும் முதல் கன்னட படம் இதுவாகவே காணப்படுகின்றது.

கேஜிஎப் 2 படம் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வரும் நேரத்தில் தற்போது அதன் இயக்குநர் பற்றி ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

அடுத்து அவர் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தினை இயக்கி வருகிறார். அத்தோடு அவரை ஒப்பந்தம் செய்ய பல பெரிய தெலுங்கு தயாரிப்பாளர்கள் முயற்சிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் பிரஷாந்த் நீல் தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். அவர் அடுத்த படைத்திற்கு 50 கோடி ருபாய் சம்பளம் கேட்கிறாராம். இந்த தகவல் தயாரிப்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement