• May 01 2024

எனக்கு திருமணமா-முதன் முறையாக உண்மையை கூறிய சாய்பல்லவி..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிரேமம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. நடிப்பு, நடனம் என அனைத்திலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்த சாய்பல்லவி தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உள்ளார்.

இவர் பிரேமம் படம் நடிப்பதற்கு முன்னரே தாம் தூம், கஸ்தூரி மான் உள்ளிட்ட சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். மற்ற நடிகைகள் போல் கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் நடிப்புக்கும் நடனத்திற்கும் மட்டும் சாய்பல்லவி முக்கியத்துவம் கொடுப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இவரை மிகவும் பிடித்துள்ளது.

மேலும் நல்ல தரமான கதைகளை மட்டும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் சாய்பல்லவி தமிழில் மாரி, என்ஜிகே உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்திவரும் சாய்பல்லவி கடைசியாக ஷ்யாம் சிங்க ராய் படத்தில் தேவதாசி கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை அள்ளினார். ஒவ்வொரு படத்திலும் சவாலான கதாபாத்திரங்களில் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார் சாய்பல்லவி.

இவ்வாறு இருக்கையில் சாய் பல்லவி சமீப காலமாக எந்த படங்களையும் ஒப்புக்கொள்வதில்லை, அதனால் அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என கடந்த சில தினங்களாக தகவல் பரவி கிசுகிசுக்கப்பட்டது.

இதற்க்கு விளக்கம் அளித்து இருக்கும் சாய் பல்லவி தனக்கு திருமணம் முடிவாகவில்லை என்றும் நல்ல கதைக்காக காத்துக்கொண்டிருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

சாய் பல்லவி நடித்தால் படம் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் நம்புகிறார்கள். அதற்காகவே நான் நல்ல கதை வந்தால் தான் ஏற்றுக்கொள்வேன் என சாய் பல்லவி கூறி இருக்கிறார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement