• Sep 21 2024

யாரு இந்த ஷோவில் இல்லாமலே இருந்திருக்கலாம்... போட்டு வாங்கும் நம்மாளு... ஆண்டவரின் அடுத்த ப்ரோமோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது 6ஆவது சீசன் ஆனது இடம்பெற்று வருகின்றது. எப்போதும் போன்றே இந்த சீசனிலும் போட்டியாளர்களிடையே நாளுக்கு நாள் சண்டை, கோபம், அழுகை என உணர்ச்சிகளும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.


குறிப்பாக இந்நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் களமிறங்கி அசத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவில் ஜி.பி. முத்துவிற்கு ரொம்பவே பிடித்த முருங்கைக்காயை அவருக்கு கொடுக்கின்றார்கள். அதுமட்டுமல்லாது அவருக்கு ஒரு போஸ்ட் பாக்ஸை பிக்பாஸ் வீட்டிற்குள் கமல் அனுப்பிவைத்துள்ள காட்சியும் இடம்பெற்று இருந்தது. 


அதுமட்டுமல்லாது அதனைத் தொடர்ந்து உங்களுக்கு எந்த இரண்டு நடிகைகளுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது? என்று கேள்வியுடன் அந்த போஸ்ட் பாக்சில் லெட்டர் ஒன்று இருக்கிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில் ஜி.பி. முத்து உடனே "நயன்தாரா, சிம்ரன்" என்று கூற என்னுடைய வேலைக்கே வேட்டு வைக்க பார்க்குறீர்களே என்று கமல் கிண்டலாக கூறுகிறார்.

அதே போல் "வீட்டிற்குள் இருக்கும் இருவரை ஹீரோயினாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் யாரை தேர்ந்தெடுப்பீர்கள்" என்று நம்ம ஆண்டவர் கேட்க, ஜி.பி. முத்து மௌனமாக இருக்கிறார். இவ்வாறாக முதல் ப்ரோமோ வெளிவந்திருந்தது.


இந்நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோவும் வெளிவந்துள்ளது. அதில் "இந்த ஷோவில் யார் இருப்பதை விட இல்லாமலே இருக்கலாம் என்ற கேள்வியை நம்ம ஆண்டவர் போட்டியாளர்களிடம் கேட்கின்றார். அதற்கு உடனே ரச்சிதா, ஜனனி ஆகியோர் எழுந்து சென்று தனலட்சுமியை கூறுகின்றார்கள். அதுமட்டுமல்லாது அமுதவாணன் விக்ரமனை கூறுகின்றார்.


இவ்வாறாக ரசிகர்களுக்கு குழப்பத்தை உண்டு பண்ணும் வகையில் கமல்ஹாசன் ஒரு கேள்வியை கேட்டிருக்கின்றார். மற்ற போட்டிட்டியாளர்களின் பதில் என்னவாக இருக்கும் என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement

Advertisement