• May 21 2024

அசீம் அடிக்க வந்தாரா? கன்னத்தை திருப்பினாரா?.. ரவுண்டு கட்டிய ஹவுஸ்மேட்ஸ்.. நடந்தது என்ன?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது  வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், சற்றும் எதிர்பாக்காத அளவுக்கு வித்தியாசமான டாஸ்க் மூலம் நிகழ்ச்சியை சூடேற்றி வருகிறார்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள். 

அந்த வகையில் தற்போது பிக்பாஸ் போட்டியாளர்கள் ஏலியன்களாக மாறி சண்டை மட்டுமே போட்டுக் கொண்டு விளையாடி வருவது, சற்று எரிச்சல் அடைய வைத்தாலும்... எதிர்பாராத ட்விஸ்டுகள் நிகழ்ச்சியை விறுவிறுப்படைய வைத்துள்ளது.


அதனைத் தொடர்ந்து 53ம் நாளில் என்ன நடந்தது என்று பார்ப்போம். அதாவது ஆதிவாசியான கதிரவனை அமுதவாணன் மடக்கிப் பிடித்து வைத்திருந்தார்.இதனால் ஒரு கட்டத்தில் இது பெரிய சண்டையாக வெடித்தது. அதில் அசீம் தன்னை அடித்ததாக அமுதவாணன் சொல்லிக் கொண்டார்.

இதன் பின்னர் ஹவுஸ்மேட்ஸ் எல்லோருமே அசீமுக்கு எதிராக திரும்பி திட்டிக் கொண்டு இருந்ததால் ஒரு கட்டத்தில் கடுப்பான அசீம் நான் பிக்பாஸ் வீட்டை விட்டு போகப்போறேன்.என்னை வெளியே அனுப்பிடுங்க என்று பிக்பாஸிடம் கேட்கின்றார்

இதனைத் தொடர்ந்து அசீம் மயங்கி விழுந்ததும் அவரை மெடிக்கல் ரூமுக்குள் கொண்டு போய் சேர்க்கின்றனர்.இதனால் ஷிவினும் விக்ரமனும் சேர்ந்து மற்றப் போட்டியாளர்களிடம் அசீம் வேணும் என்றே இப்படிப் பண்ணிட்டு இருக்கிறான் என்று மற்றவர்களிடம் கூறிக் கொண்டனர்.


இது தவிர மெடிக்கல் ரூமிலிருந்து வந்த அசீம் எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கும் போது  வீட்டுக்குள்ள இருந்த அசீம் எல்லாப் பூவையும் எடுத்துக் கொள்கின்றார். இதனால் காலையில் பூக்கள் அனைத்தும் காணாமல் போனதை கண்ட ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருத்தராக யார் இந்த பூக்களை எடுத்தது என்று கேட்டுக் கொண்டு வருகின்றனர். இருந்தாலும் பசர் அடிக்காத காரணத்தால் ஒரு கட்டத்தில் அசீம் அமுதவாணனிடம் சொல்லி விடுவதோடு அந்த பூக்களையும் கொடுத்து விடுகின்றார்.

அதற்கு அமுதவாணனும் ஏதேதோ வித்தை எல்லாம் காட்டி அந்த பூக்களை எடுத்து விடுகின்றார். இருந்தாலும் ஹவுஸ்மேட்டிற்கு அசீம் மீது சந்தேகம் வருகின்றது. இவ்வாறாக ஹவுஸ்மேட்ஸ் இந்த பூக்களை யார் எடுத்தார்கள் என்று ஒருவருக்கொருவர் பேசிட்டு இருக்கும் போதே இந்த எப்பிஷோட் முடிவடைவகை் காணலாம்.


Advertisement

Advertisement