• Apr 26 2024

மீண்டும் பாக்கியாவோடு இணைந்த கோபி.. அப்போ ராதிகா..? எதிர்பாராத ட்விஸ்ட்

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்படும் ஒரு சீரியலாக இருந்து வருகின்றது.மேலும்  இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்க போகும் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது. அத்தோடு காரணம் இன்றைய எபிசோட் பாக்யாவின் நடத்தையைப் பற்றி கோபி தவறாக பேச எழில் மற்றும் செழியன் இருவரும் சேர்ந்து கோபியை அடிக்க பாய்கின்றனர்.

இவ்வாறுஇருக்கையில் இவர்கள் குடும்பமாக சேர்ந்து இருப்பதை பார்த்து ராதிகா இனி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது. எனினும் அதே நேரத்தில் தன்னை சந்தேகப்பட்ட கோபிக்கு இனி பாக்யா என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்றும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இன்றைய எபிசோட்டில் அனைவரும் பாக்யாவுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கும் நிலையில் இனி வரும் நாட்களில் பாக்கியாவிடம் எப்படி நடந்து கொள்வார்கள்? ஒரு வேலை கோபியின் பக்கம் ஈஸ்வரி சாய்ந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறதா? என்றெல்லாம் கேள்வி எழுந்து வரும் நிலையில் தற்போது கோபியாக நடிக்கும் சதீஷ் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்.

 பாக்கியலட்சுமி குடும்பத்தார் என கோபி, பாக்கியா, ஈஸ்வரி, ராமமூர்த்தி மற்றும் இனியா என அனைவரும் வரிசை கட்டி இருக்கின்றனர். அத்தோடு அனைவரோடு கோபி சந்தோஷமாக இருப்பது போன்ற அந்த புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் அப்போ பாக்கியா பக்கத்தில் கோபி உட்கார்ந்து இருப்பதால் இனி ராதிகா வீட்டை விட்டு போய்விடுவாரா? கோபியும் பாக்யாவும் சேர்ந்து விடுவார்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

வழக்கமாக அடுத்து சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பது பற்றி க்ளூ கொடுத்து வரும் நடிகர் சதீஷ் இப்போ வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து அப்போ இனி கதை எப்படி போகப்போகிறது என்று கேள்வி அதிகரித்து வருகிறது. எனினும்  ஏற்கனவே பழனிச்சாமியிடம் அவருடைய அம்மாவின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்று பாக்யா கூறியிருப்பதால் பழனிசாமியின் அம்மா பிறந்தநாளுக்கு மொத்த குடும்பமும் வந்திருக்கிறார்களா? அல்லது இது வேறு எதுவும் பங்க்ஷனாக என்றும் கேள்விகள் எழுகிறது.




Advertisement

Advertisement

Advertisement