ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் ரசிகர்களுக்கு ஏத்தாற் போல வித்தியாசமான கதைக்களத்துடன் பல சீரியல்கள் ஒளிபரப்பப்படுகின்றது.அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
ஒரு பெண் கணவனின் துரோகங்களை எதிர்கொண்டு ஒரு குடும்பத்தை தன்னால் காப்பாற்ற முடியும் என்ற கருத்தோடு ஒளிபரப்பாகி வருகின்றது.தற்போது பல ருவிஸ்ட்களை வைத்து ஒளிபரப்பாகும் இந்த தொடர் விறுவிறுப்பின் உச்சத்தை நோக்கி நகருகின்றது.
முதலில் கோபி பற்றிய நிஜ விஷயங்கள் குடும்பத்திற்கு தெரியவரும் போது பரபரப்பாக ஓடியது.இப்போது அவர் ராதிகாவை திருமணம் செய்யும் காட்சிகள் ஓடுகிறது, அடுத்து என்ன ஆகும் என்ன ஆகும் என ரசிகர்களை யோசிக்க வைத்துக் கொண்டே இருக்கிறார் இயக்குநர்.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்துள்ளது, அதில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்து முடிந்துவிட்டன. அடுத்து என்ன கல்யாணம் தான், அந்த திருமணத்திற்கு கோபியின் அம்மா மற்றும் மகள் வருவதாக ப்ரொமோ வெளியாகிறது.
தற்போது திருமணத்தை முடித்த கோபி ஹனிமூனிற்காக கொடைக்கானல் சென்றிருப்பதாக தெரிகிறது. மேலும் அங்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் வர மெகா சங்கமம் காட்சிகள் படமாக்கப்பட உள்ளனவாம்.
இவ்வாறு இருக்கையில் சீரியல் குழுவினர் மற்றும் ராதிகா நெற்றியில் குங்குமத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இதோ,
Listen News!