• Sep 20 2024

விரைவில் ஓய்வுபெற போகிறேன்-பிரபல நடிகரின் கருத்தால் ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலக வரலாற்றிலேயே முதல் படமாக IMAX தொழில்நுட்பத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.


மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வனின் முன்னணி கதாபாத்திரங்களாக ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன் என்கிற பொன்னியின் செல்வன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை, சுந்தர சோழர், ஆழ்வார்க்கடியான் நம்பி, பெரிய பழுவேட்டரையர், சிறிய பழுவேட்டரையர், பூங்குழலி, மதுராந்தகன், பார்த்திபேந்திர பல்லவன், கொடும்பாளூர் வேளாளர் பூதி விக்ரம கேசரி கதாபாத்திரங்கள் உள்ளன.

மேலும் இதில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ரஹ்மான், விக்ரம் பிரபு, பிரபு ஆகிய முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். 

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அத்தோடு தோட்டாதரணி கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்யும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

முன்னதாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இருந்து முதல் பாடலாக வெளிவந்த பொன்னி நதி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.இந்நிலையில், தற்போது 2-வது பாடலாக சோழா சோழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. 

இதில் பேசிய விக்ரம், எனக்கும் மணிரத்னம் சாருக்கும் இடையே நல்ல உறவும், நல்ல புரிதலும் இருக்கிறது. மணிரத்னத்தின் பல நாள் கனவு நிஜமாகியிருக்கிறது. மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோரின் படங்களில் நடித்த பின்னர் சினிமா துறையில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்து இருக்கிறேன். 



மேலும் இந்தப்படத்தில் இப்படியான ஒரு கதாபாத்திரம் கிடைத்தற்கு நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று பேசினார். விக்ரம் விரைவில் ஓய்வுபெற போகிறேன் என பேசியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.



Advertisement

Advertisement