பல பெரிய ஹீரோக்களின் படங்களில் சூப்பர் வில்லனாக நடித்து பின்னர் அப்பாவாகவும் நடித்து அசத்திய நடிகர் ரகுவரன் இவர் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து 2008 ஆம் ஆண்டு தனது 49 ஆவது வயதில் மரணமடைந்தார். இவரது இழப்பு மொத்த திரையுலகையுமே சோகத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் தற்போது இவரின் நெருங்கிய நண்பனும் நடிகருமாகிய பப்லு மரணம் குறித்த தகவலை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அதாவது ரகுவரன் போதைப்பொருளுக்கு அடிமையாகி மூளையில் இருக்கும் நினைவு பகுதி செயலிழந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இவர் திருத்த முயன்றபோது "உன்னோட வேலை எதுவோ அதை மட்டும் பார் " என கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த காலத்தில் இருவரதும் காதலிகள் மிகவும் நெருங்கிய தோழிகள் என்பதால் அதிகமான நேரங்களில் சேர்ந்தே இருப்பதாக கூறியுள்ளார்.
Listen News!