• Sep 20 2024

காளியை தொடர்ந்து சிவனும் - பார்வதியும் ஜோடியாக தம் அடிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட லீனா மணிமேகலை

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சில முக்கியமான பிரச்சனைகளை தைரியமாக வெளிப்படையாக உலகிற்கு எடுத்துரைக்கும் கவிஞர்களில் முக்கியமானவர்களில் லீனா மணிமேகலை.

ஒதுக்கப்பட்ட ஜாதி என சொல்லப்படும் மக்களின் நிலைமை, குழந்தை திருமணம், ஓரின சேர்க்கை, பெண்கள் உரிமைகள், பாலியல், சமூக ஒடுக்குமுறைகள், ஈழப் போராட்டங்கள் என பல bold கதைகளை documentary திரைப்படமாக எடுத்துரைத்தவர்.

இவர் சமீபத்தில் காளி என்கிற ஆவணப்பட போஸ்டரை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். அந்த போஸ்டரில் காளி போல் வேடமணிந்திருந்த பெண் ஒருவர் வாயில் சிகிரெட் வைத்திருப்பது போலவும், கையில் LGBT சமூகத்தின் கொடியை பிடித்திருப்பது போலவும் காணப்பட்டது.

மேலும் இந்த போஸ்டரை பார்த்து ஆத்திரமடைந்த நெட்டிசன்கள், இந்துக் கடவுளை அவமதிக்கும் விதமாக போஸ்டர் வெளியிட்ட லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என கண்டனக் குரல்கள் எழுப்பி வந்தனர். இதுதவிர அவர் மீது வழக்கறிஞர் ஒருவர் டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பேரில் லீனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நேற்று லீனா மணிமேகலையில் இந்த சர்ச்சைக்குரிய போஸ்டரை நீக்கி டுவிட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. எனினும் அதேபோல் டொரண்டோவிலுள்ள ஆகா கான் அருங்காட்சியகம் இந்த ஆவணப்படத்தை திரையிடப்போவதில்லை என்றும் அறிவித்திருந்தது. மேலும் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தற்போது மேலும் ஒரு சர்ச்சைக்குரிய பதிவை போட்டுள்ளார் லீனா மணிமேகலை.

அதன்படி அவர் தற்போது சிவன் - பார்வதி வேடமிட்ட இருவர் ஜோடியாக நின்று சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து இது வேறு எங்கேயோ எடுத்த புகைப்படம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் காளி போஸ்டருக்கே கொதித்தெழுந்த நெட்டிசன்கள், தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த பின் அவரை திட்டி பதிவிட்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement