• May 19 2024

போலீஸ் வழக்கில் சிக்கிய சினிமா பிரபலங்கள்; அடடே இவங்களுமா

Prema / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் உள்ள நடிகர், நடிகைகள் பலரும் மக்கள் மத்தியில் எளிதில் பிரபலமாகி விடுவார்கள். இதனால் அவர்கள் நல்லது செய்தாலும் சரி, கெட்டது செய்தாலும் சரி உடனே அது அவர்களது ரசிகர்களை சென்றடைந்து விடும். இதனால் திரைப்பிரபலங்கள் தங்களது சொந்த வாழ்க்கையை மறைமுகமாக வைத்துக்கொள்ள முயன்றாலும் அது முடியாத காரியமாக மாறிவிடுகின்றது.

இப்பிரபலங்களில் ஒரு சில நடிகர், நடிகைகள் போலீஸ் வழக்கில் சிக்கிய வரலாறு உண்டு. அதுமட்டுமன்றி சிலர் அந்த விஷயங்களை வேறுபக்கம் திசை திருப்பி விடுவதும் உண்டு. அவ்வாறு தமிழ் சினிமாவில் போலீஸ் வழக்கில் சிக்கிய ஒரு சில பிரபலங்கள் பற்றிய தகவல்கள் வெளியே கசிந்து வருகின்றன. அந்த நடிகர், நடிகைகள் யார் எனவும், அவர்கள் போலீஸில் சிக்கியமைக்கான காரணம் என்ன எனவும் பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் 'சென்னை 600028, ராஜா ராணி, திருமணம் என்னும் நிக்காஹ்' போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்த நடிகர் ஜெய் முன்னர் ஒருமுறை போலீஸ் வழக்கில் சிக்கியதாக கூறப்படுகின்றது. அதாவது இவர் ஒருமுறை குடித்து விட்டு மது போதையில் கார் ஓட்டி விபத்து ஒன்றினை ஏற்படுத்தி இருந்தார். அப்போது ஜெய்யுடன் இணைந்து நடிகர் பிரேம்ஜியும் காரில் இருந்துள்ளார். அவர் ஏற்படுத்திய அந்த விபத்தினால் யாருக்கும் காயம் ஏற்படாவிட்டாலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் அவர் மீது போலீஸில் வழக்கு தொடரப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

Anjali Latest Photos Stills at Geethanjali Pressmeet

அதேபோன்று போலீஸில் சிக்கிய இன்னொரு நடிகை அஞ்சலி. இவர் 'கற்றது தமிழ், அங்காடித்தெரு, கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கின்றார். இவர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைப்பதற்கு அவரது சித்தி பாரதிதேவி தான் காரணமாக இருந்தாராம். ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இவர்களது பிரச்சினை போலீஸ் கேஸ் வரை சென்றது. அதாவது அவரது சித்தி அஞ்சலியின் மீது போலீஸ் வழக்கு தொடர்ந்திருந்தார் எனக் கூறப்படுகின்றது.

Actress Madhumitha in Vellai Ulagam Tamil Movie Stills

இவர்களைப் போன்றே தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகை மதுமிதாவும் போலீஸ் வழக்கில் சிக்கியிருந்ததாக கூறப்படுகின்றது. மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை மதுமிதாவிற்கும் அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் உஷா என்பவருக்கும் இடையில் அடிக்கடி மோதல், சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் நடிகை மதுமிதா மீது உஷா போலீஸ் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகர் செந்தில். அதிலும் இவர் அதிகமாக கவுண்டமணியுடன் இணைந்தே நடித்திருந்தார். இந்நிலையில் ஒருமுறை நடிகர் செந்தில் தொலைக்காட்சியில் பேட்டி ஒன்றினை அளிக்கும் போது ஒரு எம்பியை விமர்சித்து பேசியிருந்தார். இதனால் அந்த எம்பி இவரின் மீது போலீஸில் புகார் ஒன்றினைக் கொடுத்திருந்தார். இதனால் செந்தில் மீது வழக்கு பதியப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகின்றது.

அத்தோடு நடிகர் சந்தானத்தின் மீதும் கொடுக்கல் வாங்கல் தகராறின் பேரில் வழக்கு போடப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர்களைப் போன்றே நடிகர் அருண் விஜய் மீதும் போலீஸில் வழக்குப் பதியப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இவர் ஒருமுறை போலீஸ் வாகனத்தின் மீது விபத்து ஒன்றினை ஏற்படுத்தி இருந்தார். இதன் காரணமாக அந்த வாகனம் சேதமடைந்தமையால் இவர் மீது வழக்குத் தொடரப்பட்டு இருந்தது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement