• Apr 26 2024

என்னோட எவிக்ஷன் பற்றி அப்பவே தெரியும் எல்லாமே பேக் பண்ணி வச்சுட்டேன்- ஆயிஷாவைக் கண்டதும் உளறிய தனலட்சுமி

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ன், குயின்சி, ராம், ஷெரினா,நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.

 பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது ரச்சிதா, ஆயிஷா ஆகியோர் தற்போது என்ட்ரி கொடுத்துள்ளனர். பிக் பாஸ் வீட்டின் சிறந்த போட்டியாளர்களாக வலம் வந்த இவர்கள் இருவரையும் உள்ளே இருந்த ஹவுஸ்மேட்ஸ் மிக உற்சாகமாக வரவேற்றிருந்தனர். அதிலும் ரச்சிதாவுக்கு மிகவும் நெருங்கிய தோழியான ஷிவின் அவரை கட்டியணைத்து கண்கலங்கியது பலரையும் மனம் உருக வைக்கும் வகையில் அமைந்திருந்தது.


இதனையடுத்து ஹவுஸ்மேட்ஸ் உடன் பேசிக்கொண்டிருந்த ஆயிஷா, தன்னிடத்தில் தனலட்சுமி பேசவில்லை என வருத்தப்பட்டு கூறியிருந்தார். அதன்பிறகு இருவரும் தங்களுடைய வெளியுலக வாழ்க்கை குறித்து பேசியிருக்கின்றனர். தனக்கு வெளியே சென்ற முதல் நாள் சற்று கவலையாக இருந்ததாகவும் அதன் பின்னர் அதுவே சரியாகிவிட்டதாகவும் ஆயிஷா கூறுகிறார். மேலும், பிக்பாஸ் குறித்து தன்னுடைய நண்பர்கள் சொல்லிய பல விஷயங்கள் தனக்கு ஆச்சரியமாக இருந்ததாகவும் ஆயிஷா குறிப்பிட்டு இருந்தார்.

அப்போது பேசிய தனலட்சுமி, "அந்த வாரம் வெளியே போவேன்னு நான் யூகிச்சு இருந்தேன். நான் எல்லாமே பேக் பண்ணி வச்சுட்டேன். நீ வெளியே போனப்போ, அதுக்கு அப்புறம் ஜனனி எவிக்ஷன் ஆனப்போ மைனா அக்கா கிட்ட கொஞ்சம் குளோஸ் ஆனேன். ஆனா அப்போவே வீட்டு ஞாபகம் வந்துடுச்சு. எப்படியாவது வெளியே போய்டணும்னு தோணுச்சு. அப்போவே, எனக்கு தெரியும் வெளியே போய்டுவேன்னு" என கூறியிருந்தார்.



Advertisement

Advertisement

Advertisement