• May 19 2024

செழியன் பிரச்சினையை ஊதி பெரிதாக்கும் ஈஸ்வரி! மனதில் உள்ளவற்றை வெளிப்படுத்தும் ஜெனி! அடுத்து நிகழ்ப்போவது என்ன?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலக்சுமி. அதில் அடுத்து என்ன என்ன நடக்கும், எவ்வாறு கதை நகருமென பார்ப்போம்..

அதன்படி, செழியனுக்கு விவகாரத்து நோட்டிஸ் ஜெனியின் வீட்டில் இருந்து வர, எல்லாரும் பதறி துடித்து தீர்த்துவைக்க வழிதெரியாமல் யோசித்துக் கொண்டு உள்ளனர்.

மறுபக்கம், எனக்கு தெரியாமல் எதற்கு விவாகரத்து நோட்டிஸ் அனுப்பினீங்க என, தனது தாய், தந்தையுடன் வாக்குவாதம் செய்கிறார். ஆனாலும் அவர்கள் செழியன் உனக்கு வேணாம்மா என சொல்லுகின்றனர்.


இதை தொடர்ந்து, ஈஸ்வரியும் நல்ல வக்கில் பாரு, அவங்க மட்டுமா நோட்டிஸ் அனுப்புவாங்க.. நாங்களும் பதிலுக்கு அனுப்புவோ,அனுப்புவோம் என கோபியிடம் சொல்லி புலம்புகிறார்.

இந்தநிலையில், ஜெனி வீட்டுக்கு போன செழியனிடம் மனவிட்டு பேசுகிறார் ஜெனி.


அதாவது, உன் மேல வருத்தம், கோவம் எல்லாமே இருக்கு. ஆனா உன்ன விட்டு பிரியனும்னு நினைக்கல என தனது மனதில் இருந்தவற்றை சொல்ல, இது போதும் எனக்கு.. நான் உன்ன நல்லா பாத்துக்கிறேன் வா ஜெனி என செழியனும் பேசுகிறார்.

இதேவேளை, கணேஷ் பிரச்சனையை இன்னும் பாக்கியா சொல்லாத நிலையில், கணேஷ் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.


 

Advertisement

Advertisement