ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்தப் படத்தில் மொத்தம் 50 கேரக்டர்கள் உள்ளதாகவும், இதில் 15 பேர் மிக முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இத்திரைப்படத்திலிருந்து மொத்தம் 12 பாடல்கள் உருவாகி உள்ளன. இதில் ஒரு பாடலை இயக்குனர் மணிரத்னமே எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக மணிரத்னம் படங்களுக்கு வைரமுத்து பாடல்களை எழுதுவார். ஆனால் முதல் முறையாக பொன்னியின் செல்வன் படத்துக்காக கவிஞர் இளங்கோ கிருஷ்ணன், வெண்பல கீதையன், கபிலன் வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர்.
அத்தோடு படத்தின் ரிலீஸிற்கு இன்னும் ஒரு மாதகாலமே உள்ளதால் அதன் புரமோஷன் பணிகள் நடந்து வருகின்றது.மோஷன் போஸ்டர், கேரக்டர்கள் போஸ்டர், டீசர் ஆகியவற்றை அடுத்தடுத்து வெளியிட்டு ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு தீவிரமாக துவக்கி உள்ளது. இந்த படத்தில் இருந்து முதல் பாடலாக பொன்னி நதி, இரண்டாவது பாடலான சோழா சோழா வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி உள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு கொடுத்துள்ள சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதில் ,இப்படத்தில் நடித்த சீனியர் நடிகரான விக்ரம்,ஜெயராம் ரமேஷ், பார்த்திபன், பிரபு, கார்த்தி என மற்ற எல்லோரையும் விட ஜெயம் ரவிக்குதான் அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். ஏனென்றால் படத்தில் மற்ற நடிகர்களை விட அவருக்குதான் முக்கியத்துவம் அதிகம் என்றும் அதிக நாட்கள் படப்பிடிப்பில் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
விக்ரம், கார்த்தி மற்றும் ஐஸ்வர்யா ராயை விட ஜெயம் ரவிக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் இடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் நம்பறமாதிரியா இருக்கு என்று கேட்டு வருகின்றனர்.
Listen News!