• Nov 21 2025

இசைத்திறமையை உலகறிய வைத்தது இளையராஜாவின் வார்த்தை...!மனம் திறந்த பிரபலம் யார் தெரியுமா?

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சில பாடல்கள் இசை ரசிகர்களின் மனத்தில் என்றும் நிலைத்து நிற்கும். 1977-ம் ஆண்டு வெளிவந்த பாரதிராஜாவின் டைரக்‌ஷனில் உருவான '16 வயதினிலே' படத்தில் இடம் பெற்ற 'செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா' என்ற பாடலும் அப்படிப்பட்ட ஒன்றாகும்.


இந்தப் படம் இயக்குநர் பாரதிராஜாவின் முதலாவது படமாகும். இளையராஜா இசையமைத்த இந்தப் படத்தில், கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நடித்தனர். பாடல்களை கவிஞர்கள் கண்ணதாசன், கங்கை அமரன், ஆலங்குடி சோமு எழுதியிருந்தனர். அதில் இந்தப் பாடலை கண்ணதாசன் எழுதி, பி. சுசீலாவுடன் இணைந்து பாடியவர் மலேசியா வாசுதேவன்.


சுவாரஸ்யமானது என்னவென்றால், இந்தப் பாடலை முதலில் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் பாடவேண்டியிருந்தார். ஆனால், பதிவு நாளன்று அவருக்கு தொண்டை பிரச்சனை ஏற்பட்டதால் பாட முடியவில்லை. அந்த நேரத்தில் இளையராஜா, மலேசியா வாசுதேவனை அழைத்து – “இந்த பாடலை நீ பாடினால் நல்ல பெயர் வரும்” என்று உற்சாகப்படுத்தினார்.


பாடல் வெளியானதும் மக்கள் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்றது. மலேசியா வாசுதேவனுக்கு இது மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பின்னாளில் அவர் முன்னணி பாடகர் மட்டுமன்றி, நடிகராகவும் பல்வேறு கதாபாத்திரங்களில் பாராட்டப்பட்டார். இந்த ஒரு வாய்ப்பு அவருடைய வாழ்வையே மாற்றியது என்பது தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாகும்.

Advertisement

Advertisement