• Sep 20 2024

கல்யாணம் முடிந்த கையோடு ஆதியும் நிக்கியும் எங்கே போயிருக்கிறாங்க தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் டார்லிங் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நிக்கி கல்ராணி. இப்படத்தைத் தொடர்ந்து ஜெய், ஜுவா, சிவா, ராகவா லாரன்ஸ் ,ஆதி ,பிரபு தேவா எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இவர் சமீபத்தில் நடிகர் ஆதியை காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் மரகதநாணயம் என்ற படத்தில் சேர்ந்து நடித்தனர். அவர்கள் ஆரம்பத்தில் நட்பாக பழகி அதன் பின் காதலிக்க தொடங்கி தற்போது திருமணம் செய்திருக்கிறார்கள்.

திருமண வரவேற்ப்பில் சினிமா துறையினர் பலரும் கலந்துகொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் நிக்கி தொடர்ந்து நடிப்பாரா என்று தான் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தார்கள்

இந்நிலையில் ஆதியும் நிக்கி கல்ராணியும் கணவன் மனைவியான பிறகு முதல் முறையாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

ஆதிக்கும் நிக்கி கல்ராணிக்கும் ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மேலும் சாமி தரிசனத்தை தொடர்ந்து வெளியே வந்த ஆதி மற்றும் நிக்கி கல்ராணியை பார்த்த ரசிகர்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நிக்கி கல்ராணி கழுத்தில் திருமணத்தின் போது கட்டப்பட்ட புது மஞ்சள் கயிறை அணிந்திருந்தார்.

அத்தோடு ஆதியும் நிக்கியும் ஏழுமலையான் கோவிலில் வழிபாடு செய்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ஹனிமூன் போகலையா என கேட்டு வருகின்றனர். ஆதியும் நிக்கியும் யாகாவராயினும் நா காக்க மற்றும் மரகத நாணயம் ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஆதியின் நடிப்பில் கடைசியாக க்ளாப் படம் வெளியானது. எனினும் தற்போது லிங்குசாமி இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் தி வாரியர் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே நடிகை நிக்கி கல்ராணி திருமணத்திற்கு பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement