• Sep 20 2024

விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கிய சமயத்தில் மீரா தாயிடம் என்ன கூறியுள்ளார் தெரியுமா..? பிரபலம் பகிர்ந்த தகவல்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் ஆண்டனி பிரபல நடிகர் மட்டுமல்லாது சிறந்த இசையமைப்பாளரும் ஆவார். அவரின் மனைவியும் திரைத்துறையில் தயாரிப்பாளராக இருக்கிறார். மேலும் இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் அவரின் மூத்த மகள் மீரா நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


இதனையடுத்து நேற்றைய தினம் இவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மீராவின் இழப்பானது விஜய் ஆண்டனிக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் மீளாத் துயரினை ஏற்படுத்தி இருக்கின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தான் பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.


இந்நிலையில் தயாரிப்பாளர் டி.சில்வா விஜய் ஆண்டனி மகளின் இறப்பைத் தொடர்ந்து இது குறித்துப் பேசுகையில், விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கிய போது அவரது மனைவி பாத்திமா என்ன செய்வதென்று தெரியாமல் நிலைகுலைந்து போனாராம், அந்த சமயத்தில் அவருக்கு ஆறுதலாக இருந்தது மீரா தானாம்.

அதாவது மீரா தனது தாயிடம் "நான் அப்பாவின் ரிப்போர்ட் எல்லாவற்றையும் பார்த்து விட்டேன், ஒரு பிரச்சனையும் இல்லை என போட்டிருக்கிறது. நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம், இன்னும் சில மாதங்களில் அப்பா முழுமையாக குணமாகி விடுவார்" எனக் கூறித்தனது தாயிற்கு உறுதுணையாக இருந்திருக்கின்றார். 

இந்தளவிற்கு மனதைரியம் உள்ள மீராவா இப்படி ஒரு முடிவை எடுத்தார்..? இப்பவும் எனக்கு இது பேரதிர்ச்சியாக இருக்கிறது என தயாரிப்பாளர் டி.சிவா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement