• Apr 29 2024

காஷ்மீரில் இருந்து த்ரிஷா மூன்றே நாளில் சென்னைக்கு திரும்பியதற்கு என்ன காரணம் தெரியுமா?-படக்குழு தகவல்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடித்து வரும் 67 வது திரைப்படம் தான் லியோ. இப்படத்தை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகின்றார்.விஜய்யுடன் இவர் மூன்றாவது முறையாக இணைவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது.

இப்படத்தில்  விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் மேனன், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், ஏஜென்ட் டீனா, பிக்பாஸ் ஜனனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. படத்தின் பூஜைகள் வெளியாகி செம்ம வைரலானது. 


இந்தப் படத்தின் மூலம் 14 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை த்ரிஷாவும் நடிக்ர விஜய்யும் இணைந்து நடிக்கின்றனர். ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் வெளியான கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்தப் படத்திலும் இருவரது கெமிஸ்ட்ரியை காண ஆர்வமாக உள்ளனர் ரசிகர்கள்.


இந்நிலையில் படப்பிடிப்பு தொடங்கிய இரண்டே நாட்களில் நடிகை த்ரிஷா சென்னை திரும்பினார். மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில் லியோ படம் குறித்த தான் பதிவிட்டிருந்த டிவிட்டுகளையும் நீக்கினார். இதனால் விஜய்யின் லியோ படத்தில் இருந்து த்ரிஷா விலகிவிட்டதாக தகவல் வெளியானது. மேலும் லியோ படத்தில் தனக்கு நடிப்பதற்கு ஸ்கோப்பே இல்லை என்றும் இதனால் லோகேஷ் கனகராஜுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் த்ரிஷா படப்பிடிப்பில் இருந்து கோபத்தில் வெளியேறி விட்டார் என்றும் கூறப்பட்டது.


இந்நிலையில் நடிகை த்ரிஷா காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பியதற்கான காரணம் வெளியாகியுள்ளது. அதாவது காஷ்மீரில் கடுமையான குளிர் நிலவுவதால் நடிகை த்ரிஷாவால் தாக்கு பிடிக்க முடியவில்லையாம். த்ரிஷாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் சென்னை திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் க்ளைமேக்ஸ் காட்சிதான் தற்போது படமாக்கப்படுகிறது என்றும் இதில் த்ரிஷாவின் காட்சிகள் குறைவு என்பதாலும் அவர் காட்சிகள் முடிந்த பின்னரே சென்னை திரும்பியுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement