• Apr 28 2024

'தி லெஜண்ட்' படத்தில் நடிப்பதற்கு இவ்வளவு சம்பளம் வாங்கினாரா கதாநாயகி..? வாயடைத்துப் போன ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் மிகவும் பிரபலமான தொழிலதிபராகவும் சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளராகவும் அறியப்பட்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் சரவணன் அருள். எப்போதுமே தனது தொழிலில் கவனம் செலுத்தி வருகின்ற இவர் தற்போது' தி லெஜண்ட்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கின்றார்.

ஜெ டி ஜெர்ரி என்பவரின் இயக்கத்தில் நடிகை ஊர்வசி ரவுத்தேலா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இப்படத்தினூடாகவே ஊர்வசி ரவுத்தேலா முதன் முதலாக காலடி எடுத்து வைக்கின்றார். மேலும் இப்படம் நேற்று வெளியானது முதல் ஒரு சிலரிடமிருந்து சிறந்த வரவேற்புகளைப் பெற்று வருகின்ற அதேநேரம் பலரிடமிருந்து மோசமான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது இப்பட கதாநாயகி தொடர்பாக ஒரு தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. 'Miss Diva Universe 2015' பட்டம் பெற்றுள்ள இவர் ஒரு சில பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துப் பிரபலமாகியிருக்கின்றார். இதனால் 'தி லெஜண்ட்' திரைப்படத்தில் அண்ணாச்சிக்கு கதாநாயகியாக நடித்துள்ள ஊர்வசிக்கு தரப்பட்ட சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இப்படத்திற்காக அவருக்கு ரூ. 20 கோடி சம்பளமாக அளிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் "இவ்வளவு காசு கொடுத்ததால் தான் அவர் இந்தப் படத்தில் நடிக்க வந்தாரா?" எனக் கலாய்த்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement