• May 13 2024

காலை மடக்கி நடக்க மறந்த பிரபுதேவா- இயக்குநர் போட்ட கண்டிஷனால் ஏற்பட்ட பிரச்சினை

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் சந்தோஷ் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் பொய்க்கால் குதிரை. இப்படத்தில் ஷாம், பிரகாஷ்ராஜ், ஜெகன், ஜான் கொக்கேன் மற்றும் நடிகைகள் வரலட்சுமி ரைசா வில்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் பிரபுதேவா ஒரு கால் இல்லாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது மகளின் படிப்பிற்காக பணம் சேர்த்து வைத்திருக்கும் பிரபுதேவாவிடம் அந்தப் பணத்தை தனக்கு செலவு செய்ய வேண்டாம் உங்களுக்கு ஒரு கால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று மகள் கூற, மகனின் ஆசையை நிறைவேற்றுகிறார்.

ஒரு கட்டத்தில் மகளை யாரோ கடத்திச் செல்ல அவளை கண்டுபிடிப்பதற்காக பல சவால்களை சந்திப்பது போன்று கதை அமைந்துள்ளது. நடனத்திற்கு பெயர் போன பிரபுதேவா மாஸ்டர் இதில் ஒரு கால் இல்லாமல் நடித்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சமீபத்தில் இந்தப் படம் தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது, அதில் அபூர்வ சகோதரர்களின் கமல் ஹாசன் பல சிரமங்களை தாண்டி அதில் நடித்தார். இதில் நீங்கள் எப்படிப்பட்ட சவால்களை சந்தித்தீர்கள் என்று கேள்வி கேட்டபோது ஆரம்பத்தில் காலில் கிரீன் துணி கட்டிக்கொண்டு ஈசியாக நடித்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அது பார்ப்பதற்கு ஒற்றைக்கால் உள்ள மனிதரின் உடல் மொழியாக தெரியாமல் மிகவும் எளிமையாக இருந்தது.

அதனால் காலை மடக்கியே படம் முழுவதும் சிரமப்பட்டுதான் நடித்துள்ளேன். அதுவும் சில ஷாட்ஸ் நன்றாக வந்திருந்தாலும் தனக்கு ஒரு கால் இல்லை என்பதை மறந்து இயல்பாக நடந்து நடித்து விடுவேன். பின்னர் இயக்குநர் சுட்டிக் காட்டியவுடன் அதனை திருத்திக் கொண்டதாகவும் மீண்டும் அது போல் தவறு நடக்கக்கூடாது என்று கேரவனிலிருந்து ஸ்பாட்டுக்கு நடந்து செல்லும் போது கூட ஊனமுற்றவர் உடல் மொழியிலேயே தான் இருந்ததாகவும் பிரபுதேவா கூறியுள்ளார்.

இப்படம் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி வெளியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement