• Apr 28 2024

20 வருஷமா கட்டிக் காத்த கொள்கையை கை விட்ட சூர்யா- விக்ரம் படத்திற்காக பண்ணினாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாஸ் இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாகன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகிய திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தில் விஜய்சேதுபதி மற்றும் ப பகத் பாசில் சூர்யா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கடந்த ஜுன் மாதம் 3ம் திகதி வெளியாகிய இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் முகமாக லோகேஷிற்கு கார் மற்றும் 13 துணை இயக்குநர்களுக்கு பை என்பனவற்றை வழங்கினார். அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் சூர்யாவுக்கு ரோலக்ஸ் மணிக்கூடு ஒன்றையும் வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் இப்படத்தினை பற்றி பிரபல சேனல் ஒன்றில் பேசிய லோகேஷ் சூர்யாவைப் பற்றி பேசியதாவது இப்படி ஒரு காரக்டர் இருக்கு யாரை வைச்சு பண்ணலாம் என்று கேட்ட போது கமல் சேர் சூர்யா சேரை சொன்னார். பின்பு அவரே போன் பண்ணி பேசினார். அதுக்குப் பிறகு நான் நேராக பேசினேன்.

ஓகே சொல்லிட்டாரு. அத்தோடு படங்களில் சிகரெட் பிடிக்க மாட்டேன் என்று 20 வருஷத்துக்கு முதலே கூறியிருந்தார். ஆனால் இந்த படத்தில வருகின்ற காரெக்டருக்கு சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் பிடிச்சாரு. அதை விட கண்ணுக்கு லென்ஸ் எல்லாம் வச்சாரு என்று சூர்யா பற்றி பெருமையாகக் கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement