• May 20 2024

முதல் படத்திலேயே இத்தனை லட்சத்தினை சம்பளமாகப் பெற்றாரா?- நடிகை ஆல்யா பட் குறித்து வெளியாகிய தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் தான் ஆலியா பட் .இவர் இறுதியாக இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவர் கடந்த 2012ம் ஆண்டு வெளியாகியிருந்த  ஸ்டூடன்ட் ஆப் த இயர் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகியிருந்தார்.இதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.


அத்தோடு ஆல்யா நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டதோடு தற்பொழுது கர்ப்பமாகவும் உள்ளார்.இருப்பினும் படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் இவர் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.அதாவது இவர் நடித்த முதலாவது படமான ஸ்டூடன்ட் ஆப் த இயர் படத்திற்காக 15 லட்சம் சம்பளமாகப் பெற்றுள்ளாராம். இப்படத்தை கரண் ஜோகர் இயக்கியுள்ளார்.

அந்த பணத்தை நேராக அம்மாவிடம் கொண்டு சென்று கொடுத்துவிட்டாராம் அவர். தற்போது வரை அவரது அம்மா தான் அவரது பண விஷயங்களை கவனித்து கொள்கிறாராம். அது எங்கே செல்கிறது என்று கூட அவருக்கு தெரியாதாம். அதை அவரே கூறி இருக்கிறார். 

Advertisement

Advertisement