• Oct 07 2024

குடிச்சி மட்டையான புள்ளையை கொஞ்சி தூங்க வைக்கும் அப்பா! விஜய் டிவி சீரியலை காரித்துப்பும் ரசிகர்கள்

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்போது ராமமூர்த்தியின் மறைவிற்குப் பிறகு டிஆர்பி ரேட்டிங்கில் சரிந்துள்ளது. இதன் காரணத்தினால் இந்த சீரியல் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் விரைவிற்கு வர உள்ளதாகவும் பேசப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து புதிய ப்ரோமோ, ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி செழியன் நன்றாக குடித்துவிட்டு நடக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்க அவரை கோபி வீட்டிற்கு கூட்டி வருகின்றார். 

இதன் போது நீ நல்ல அப்பா என்று செழியன் கோபியை சொல்லிக் கொண்டு வருகின்றார். கோபி நேரே செழியனின் ரூமுக்குச் சென்று செழியனை படுக்க வைக்கிறார். இதன் போதும் செழியன் நீ நல்ல அப்பா என்று ஐ லவ் யூ சொல்லுகின்றார்.


செழியன் குடித்துவிட்டு வந்ததை பார்த்து எல்லோரும் அதிர்ச்சி அடைந்து நிற்கின்றார்கள். இதன்போது கோபி இந்த வீட்டில் செழியனுக்கு நிம்மதி இல்லை. அதனால் தான் அவன் குடித்துவிட்டு வருகின்றான் என்று சொல்ல, பாக்கியா இந்த வீட்டில் உள்ள பெண்களுக்கும் தான் மனக்கவலை, பிரச்சினை இருக்கு. அதனால் நாமும் குடிக்கிறோமா? பதிலடி கொடுக்கின்றார்.

இதேவேளை இந்த சீரியல் தற்போது ரொம்ப மோசமான நிலையில் செல்வதாகவும், கோபி எல்லாம் நல்ல அப்பாவா என கேட்டு ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement