• Oct 03 2024

ஆர்த்திரவிக்கு ஆறுதல் கூறும் சைந்தவி! தைரியமாக இருங்கள் அக்கா,உங்களுக்காக பிராத்திக்கிறேன்!

subiththira / 8 hours ago

Advertisement

Listen News!

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து பிரச்சினை அனைவரும் அறிந்த விடையமே. தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக சமீபத்தில் ஜெயம்ரவி அறிவித்த நிலையில் ஆர்த்தியோ ரவி எடுத்த முடிவு தனக்கு தெரியாது என்று விளக்கம் அளித்தார். இதனையடுத்து ஜெயம் ரவி - ஆர்த்தி டாபிக் கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக மாறியது. 


ரவி கடைசியாக சைரன் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இப்போது அவரது கைகளில் ஜீனி, பிரதர், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்கள் இருக்கின்றன. கண்டிப்பாக இந்த மூன்று படங்களுமே ஹிட்டடிக்கும் என்ற பெருத்த நம்பிக்கையில் இருக்கிறார் ஜெயம் ரவி. முக்கியமாக பிரதர் படத்தை அவர் ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். 


அதனையடுத்து மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்த ஆர்த்தி, "இவ்வளவு நாட்கள் நான் அமைதியாக இருந்தது எனது குற்றவுணர்ச்சி என்றோ, பலவீனம் என்றோ யாரும் நினைக்க வேண்டாம். திருமணத்தின் புனிதத்தை ரொம்பவே மதிப்பவள் நான். யாருடைய நற்பெயரையும் கெடுக்கும் விவாதங்களில் ஈடுபடமாட்டேன். இந்த விவாகரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ரவியிடம் தனிப்பட்ட முறையில் பேச காத்திருக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் ஆர்த்தியின் இரண்டாவது விளக்கத்தை பார்த்த பலரும் இந்த விஷயத்தில் என்னதான் நடக்கிறது என்று குழம்பிப்போயிருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க ஆர்த்தியின் இரண்டாவது விளக்கத்துக்கு பிறகு அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார் சைந்தவியும், குஷ்பூவும். சைந்தவி தெரிவித்திருக்கும் ஆறுதலில், 'தைரியமாக இருங்கள் அக்கா. உங்களுக்காக எனது பிரார்த்தனைகள்' என்று குறிப்பிட்டிருந்தார். 

Advertisement

Advertisement