• Oct 02 2024

ஒரே ஒரு படத்தின் மூலம் 23 பட வாய்ப்புகளை அள்ளிய நடிகர்.. பல சர்ச்சைகளுக்கு பின் விடிவுகாலம்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் பப்லு. இவர் ஏராளமான சீரியல்கள், திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலம் ஆனார். சமீபத்தில் சன் டிவியில் நிறைவுக்கு வந்த கண்ணான கண்ணே சீரியலில் நடித்திருப்பார்.

பப்லு என அழைக்கப்படும் பிரித்திவிராஜ் ஆரம்ப காலத்திலேயே மறந்த கே. பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளியான படங்களில் நடித்து பிரபலமானார். அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்த இவர், ஒரு கட்டத்தில் டிவி பக்கம் ஒதுங்கினார். அதன்படி பல சீரியல்களில் நடித்த இவர், வாணி ராணி சீரியல் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது.

இதைத்தொடர்ந்து சமீபத்தில் சீத்தல் என்ற 24 வயது பெண்ணை காதலித்து சில காலம் அவருடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்தார். சிறப்பாக சென்ற இவர்கள் உடைய வாழ்க்கையில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இவர்கள் பல சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டார்கள். தன்னைவிட வயது குறைந்த பெண்ணை காதலிப்பதாக பப்லு மீது  பலரும்  தமது வெறுப்புகளை கொட்டினார்கள். அதுபோலவே அவர்கள் இருவரும் தற்போது பிரிந்து வாழ்கின்றார்கள். ஆனால் என்ன காரணம் என இருவரும் வாய் திறக்கவில்லை.


இந்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வரும் பப்லு தான் நடித்த ஒரே ஒரு படத்தின் மூலம் 23 படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.

அதாவது நடிகர் பப்லு இறுதியாக அனிமல் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருப்பார். இந்த படத்திற்கு முதல் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம். மிகவும் கஷ்டப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தன்னுடைய வாழ்க்கையே மாறியதாகவும் அதிகமான பட வாய்ப்புகள் கிடைத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement