• Sep 20 2024

எஸ்.ஜே.சூர்யாவுக்கு எதிரான வழக்கு- நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் எஸ்.ஜே.சூர்யா.இவர் ஒரு நடிகர் மாத்திரமல்லாது இயக்குநராகவும் பட்டையை கிளப்பி வருகின்றார்.மேலும் இவர் எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் ஏற்று நடிக்கும் இயல்பு கொண்டவராவார்.

இவருடைய இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் வாலி மற்றும் குஷி ஆகிய படங்கள் ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றது.தொடர்ந்து அன்பே ஆருயிரே,மகாநடிகன்,கள்வனின் காதலி போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார்.

இருப்பினும் அவ்வளவு வெற்றி வாய்ப்பினை வழங்கவில்லை. இதனால் சில வருடங்கள் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்த சூர்யா மீண்டும் வில்லனாக நடிக்கத்தொடங்கினார்.அவருடைய வில்லன் அவதாரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அண்மையில் இவருடைய வில்லன் கதாபாத்திர நடிப்பில் வெளியான மாநாடு,டான் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்ட ரோலாக விளங்குகின்றது.

இந்நிலையில் வருமான வரி தொடர்பாக தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி எஸ்.ஜே.சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

, சென்னை உயர் நீதிமன்றம், பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் எஸ்.ஜே.சூர்யா வருமான வரி கணக்கை செய்யாததால் வழக்குகளை அவர் எதிர்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement