• Sep 20 2024

பாலியல் புகாரில் பிக்பாஸ் பிரபலம் கைது... பேரதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.  அந்தவகையில் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியை மோகன்லால் தொகுத்து வழங்கி வருகின்றார்.


இந்நிகழ்ச்சியின் முதலாவது முதல் சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளராக களமிறங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஷியாஸ். இவர் குறித்து சமீபகாலமாக சர்ச்சை ஒன்று எழுந்து வருகின்றது. அதாவது 32 வயதான பெண் ஜிம் பயிற்சியாளர் ஒருவர் ஷியாஸ் மீது போலீஸில் பாலியல் புகார் கொடுத்திருந்தார். 


குறித்த அந்தப் புகாரில் ஷியாஸ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி  எர்ணாகுளம் மூணாறில் உள்ள ஒரு லாட்ஜில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் கர்ப்பமானதும் ஷியாஸ் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதாகவும் கூறியிருக்கின்றார். அத்தோடு தன்னிடம் இருந்து ரூ.11 லட்சம் மோசடி செய்ததாகவும், 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஷியாஸ் தன்னுடன் உறவின் இருந்ததாகவும் அப்புகாரில் தெரிவித்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து ஷியாஸ் வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்யவிருக்கின்றார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் போலீஸில் புகார் அளித்திருக்கின்றார். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த ஷியாஸ், சுங்கத்துறை அதிகாரிகளால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்ட்டு பின்னர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்தத் தகவலானது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement