• Oct 03 2024

ஈஸ்வரி எடுத்த முடிவால் எரிமலையாய் வெடித்த பாக்கியா .. ராதிகாவுக்கு கடும் வார்னிங்

Aathira / 9 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஈஸ்வரியை ரெஸ்டாரண்டுக்கு வருமாறு பாக்கியா அழைத்துச் செல்கின்றார். அங்கு புதிய செப்பை அவருக்கு அறிமுகம் செய்து வைக்கின்றார். அதன் பின்பு ஈஸ்வரி அங்கு அமர்ந்திருக்க அங்கு வேலை பார்ப்பவர்கள், இன்னும் ராமமூர்த்தி இறந்து ஒரு வருடம் ஆகவில்லை அதற்குள் வியாபாரம் நடக்கும் இடத்திற்கு வரலாமா என்று பேச, ஈஸ்வரி உடனே தான் வீட்டிற்கு போக வேண்டும் என்று சொல்லுகிறார்.

இதனால் பாக்கியா என்ன நடந்தது என்று கேட்க, செல்வி  நடந்தவற்றை சொல்லுகின்றார். இதனால் அவர்களுக்கு திட்டிவிட்டு பாக்கியா ஈஸ்வரியை வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றார்.

வீட்டுக்கு சென்ற ஈஸ்வரி நான் வீட்டிலேயே இருந்திருக்கணும், உங்களுடைய கதையை கேட்டு வெளியே வந்து இருக்கக் கூடாது இந்த பொட்டும் வைத்திருக்கக் கூடாது என்று பொட்டை கழட்டி வீசி ரூமுக்குள் செல்கின்றார்.


இதனால் பாக்கியா அத்தைக்கு வேற எதுவோ நடந்திருக்கிறது என்று யோசிக்க, அந்த நேரத்தில் இனியா ராதிகாவின் அம்மா பேசியதை பற்றி சொல்லுகின்றார். இதனால் பாக்கியா கோபமாக வெளியே வரும்போது அங்கு அயல் வீட்டார்கள்  ரோட்டில் நின்று கதைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். இதன்போது அங்கே போன பாக்கியா அவர்களை திட்டிவிட்டு இனி எங்களுடைய வீட்டு விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று பேசி செல்லுகின்றார்.

இதை அடுத்து ராதிகாவிடமும் சென்று உங்களுடைய அம்மாவுக்கு சும்மா இருக்க முடியாதா? இனி எதுவும் நடந்தா சும்மா பார்த்துட்டு இருக்க மாட்டேன் என்று கண்டபடி திட்டி ராதிகாவுக்கு வார்னிங் கொடுத்து செல்கின்றார். அதன்பின் வீட்டுக்கு வந்த ராதிகா அவருடைய அம்மாவுக்கு திட்டிவிட்டு ஈஸ்வரியிடம் மன்னிப்பு கேட்க செல்கிறார். 

Advertisement

Advertisement