• Apr 28 2024

பாத்ரூத் சரியில்லை என்று படப்பிடிப்பை நிறுத்திய ரித்திகா சிங்- இயக்குநர் செய்த நெகிழ்ச்சிச் சம்பவம்- புகழ்ந்து தள்ளிய அசோக் செல்வன்

stella / 9 months ago

Advertisement

Listen News!

2020 ஆம் ஆண்டு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் லியோன் ஜேம்ஸ் இசையமைப்பில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் ‘ஓ மை கடவுளே’.  இதில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.இப்படம் கற்பனையுடன் காதலின் சிறப்பை அழுத்தமாக உணர்த்தியிருக்கும்.

இந்த படத்தில் கடவுளாக விஜய் சேதுபதி கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தின் வெற்றிக்கு என்ன காரணம் என்பதை படக்குழு சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தனர். அதாவது இந்த படத்தின் படப்பிடிப்பின் போது கதாநாயகி ரித்திகா பாத்ரூம் போக வேண்டும் என படப்பிடிப்பை அப்படியே நிறுத்திவிட்டு லாட்ஜிற்கு சென்றாராம்.


 அது சிறிய பட்ஜெட் என்பதால் சாதாரண லாட்ஜில் தான் ரூம் போட்டிருக்கிறார்கள். அதில் ஒரே ஒரு பாத்ரூம் மட்டுமே இருந்திருக்கிறது. ரித்திகா அந்த பாத்ரூமில் எட்டி பார்த்துவிட்டு சுத்தமாக இல்லை என ஒரே கலாட்டா செய்திருக்கிறார். படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து உடனடியாக அந்த பாத்ரூமை சுத்தம் செய்து கொடுத்திருக்கிறார்.

ஒரு இயக்குநர் கதாநாயகிக்காக பாத்ரூம் கழுவியது உண்மையாகவே ரசிகர்களை ஆச்சரியமாக பார்க்க வைத்துள்ளது. இந்த விஷயத்தை படத்தின் கதாநாயகன் அசோக் செல்வன் தான் படக்குழு இருக்கும்போதே அஸ்வத் மாரிமுத்துவை பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அந்த இடத்தில் அஸ்வத் மாரிமுத்து சொன்ன விஷயம் தான் கூடுதல் சிறப்பு.


‘ரித்திகா தன்னுடைய தோழி. அவருக்கு பாத்ரூம் அர்ஜெண்டாக இருக்கும்போது, அந்த இடத்தில் உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தானே கழிப்பறையை சுத்தம் செய்து அவருடைய பிரச்சனையை தீர்த்து வைத்தேன். இதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை, அதை பெருமையுடன் செய்தேன். அதுமட்டுமல்ல என்னுடைய படப்பிடிப்பிற்கு எந்த காரணத்தாலும் தடங்கள் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்’ என்று அஸ்வத் மாரிமுத்து ரொம்பவே எதார்த்தமாக பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement