• May 13 2024

சுந்தரியின் கல்யாண விஷயம் பற்றி பேசப் புறப்பட்ட அனு- மாலினியின் குழந்தை அழிந்தது என்பதை அறிந்த கார்த்திக்கின் அக்கா

stella / 10 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. இந்த சீரியல் கார்த்திக் அனு சுந்தரி என்ற இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொண்டு சுந்தரிக்கு எதிராக பல தடைகளையும் செய்து வருகின்றார்.

 இருப்பினும் தனது கணவன் தனக்கு எதிராகத் தீட்டும் சதித் திட்டங்களை எல்லாம் முறியடித்து தனது வாழ்க்கையில் எப்படி முன்னேறப்போகின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.


இதில் கார்த்திக் தான் அனுவிடம் மாட்டி விடக்கூடாது சுந்தரியும் வாழக்கூடாது என்பதற்காக அனுவிடம் சுந்தரிக்கு தன்மீது விருப்பம் இருப்பது போல காட்டிக் கொள்கின்றார். இதனால் அனு சுந்தரிக்கு எப்படியாவது இரண்டாவது திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று இருக்கின்றார்.

இந்த நிலையில் இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் சுந்தரி வீட்டுக்கு கல்யாண விஷயமாகப் பேச போவதாக அனு சொல்ல கார்த்திக் அதிர்ச்சியடைகின்றார். இது ஒரு புறம் இருக்க மாலினியின் பிள்ளை அழிந்து விட்டதற்கு காரணமும் கார்த்திக் தான் என்பது கார்த்திக்கின் அக்காவிற்கு தெரிந்து விட்டது.இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement