• Sep 20 2024

தனுஷ் அறிவித்த அறிவிப்பு…பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி, முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் தனுஷ்.

இவர் நடிகராக மட்டுமன்றி பின்னணி பாடகர், இயக்குனர், பாடலாசிரியர் என தமிழ் சினிமாவை கலக்கி கொண்டுள்ளார்.

இவ்வாறுஇருக்கையில் தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த தனுஷிற்கு சமீபகாலமாக வெளியான அவரது படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஜகமே தந்திரம், அத்ராங்கி ரே, மாறன் ஆகிய படங்கள் OTTயில் வெளியாகி படு தோல்வி அடைந்தது. அதிலும் குறிப்பாக மாறன் திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. எனவே தன் அடுத்த படத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து மீண்டும் வெற்றி பாதைக்கு செல்லும் முனைப்பில் தனுஷ் இருக்கின்றார்.

எனினும் தற்சமயம் செல்வராகவனின் நானே வருவேன், மித்ரன் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள படமான திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் அடுத்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதாவது தனுஷ் மற்றும் அனிருத் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்துள்ள இப்படத்தின் சிங்கிள் ஜூன் 24 ஆம் தேதி வெளியாகியுள்ளது.

மேலும் இதனை வித்யாசமான ப்ரோமோவின் மூலம் அறிவித்துள்ளனர் படக்குழுவினர். மேலும் தனுஷ் ஏழு வருடங்களுக்கு பிறகு அனிருத்தின் கூட்டணியில் வெளியாகும் சிங்கிள் என பதிவிட்டுள்ளார். தாய் கிழவி என துவங்கும் இப்பாடலை தனுஷ் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement