• Apr 28 2024

9 மாதங்களுக்குப் பிறகு கணவரிடம் பேசிய ஐஸ்வர்யா...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 ஐஸ்வர்யாவும் தனுஷும் மீண்டும் சேர்ந்து வாழவுள்ள நிலையில் அவர்கள் குறித்த முக்கிய தகவல் ஒன்று  இணையத்தில் உலாவி வருகின்றது.

கடந்த 2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்த ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தனுஷுக்கும் யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளார்கள். இவ்வாறுஇருக்கையில்  இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுகுறித்து இரு குடும்பத்தாரும் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தி , சமாதானம் செய்து வைத்தனர்.

ஆனால் இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு முற்றியதால், கடந்த ஜனவரி மாதம் இருவரும் பரஸ்பரம் பிரிவதாக  தெரிவித்தனர். இதையடுத்து ஐஸ்வர்யாவும் தனுஷும் தனித்தனியாக வசித்து வந்தனர். மகன்கள் இருவரும் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என மாறி மாறி இருந்து வருகின்றனர்.

இவ்வாறுஇருக்கையில்  ஐஸ்வர்யாவும் தனுஷும் மீண்டும் சேர்ந்து வாழப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.போயஸ் கார்டன் வீட்டில் நடந்த பேச்சு வார்த்தையில் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்துள்ளார்கள். மகன்களின் பிடிவாதம்தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

தனுஷும் ஐஸ்வர்யாவும் மீண்டும் இணைந்துள்ளதால் இருவருக்கும் ரசிகராக இல்லாதவர்கள் கூட மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் இருவர் குறித்தும் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஐஸ்வர்யா தனது காதல் கணவரான தனுஷிடம் 9 மாதங்கள் கழித்து போனில் பேசியுள்ளார்.

அத்தோடு சேர்ந்து வாழ சம்மதித்த பிறகு தனஷுக்கு போன் செய்துள்ளார் ஐஸ்வர்யா. அப்போது இருவரும் ஹலோ சொன்ன பிறகு சில நிமிடங்கள் அமைதியாகவே இருந்தார்களாம். கேள்வி - பதில் என ஒரு சில வார்தைகள் பேசிய நிலையில் பெரும்பாலும் மவுனமாகவே கழிந்ததாம் அந்த கான்வெர்சேஷன்.

இதனைக் கேட்ட ரசிகர்கள் இத்தனை நாள் பிரிந்திருந்த நிலையில், உடனே இயல்பு நிலைக்கு வர சில நாட்கள் ஆகும்தான். அத்தோடு அனைத்தையும் மறந்துவிட்டு மீண்டும் பழையப்படி நல்ல கணவன் மனைவியாகவும் பெற்றோராகவும் மற்றவர்களுக்கு உதாரணமாக வாழுந்துக்காட்டுங்கள் என தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement