தமிழ் சினிமாவில் 90களின் தவிர்க்க முடியாத காதல் மன்னனாக வலம் வந்தவர் தான் நடிகர் பிரசாந்த். இவர் ஆரம்பத்தில் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் காதல் சம்மந்தப்பட்டதாக இருந்ததால் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது.
மேலும் பிரபல நடிகரும் இயக்குநருமான தியாகராஜனின் மகனான இவருக்கு இடைப்பட்ட காலத்தில் உடல் எடை அதிகரித்தமையால் படவாய்ப்புக்கள் குறைய ஆரம்பித்தது. இதனால் சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் தற்பொழுது மீண்டும் அந்தகன் படத்தின் மூலம் கதாநாயகனாக ரி என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
இவர் பிரபல்ய நடிகராக இருந்த காலத்திலேயே திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். ஆனால் அவருடைய குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக அமையவில்லை எனலாம்.
மேலும் நடிகர் பிரசாந்த் சினிமாவில் நுழைந்ததில் இருந்து எப்போதும் தனது அப்பாவை பற்றி கூறிக்கொண்டே இருப்பார். அவரால் தான் நான் சினிமாவில் ஜெயித்தேன், என் அப்பா எனக்கு மிகவும் முக்கியமானவர் என அவரைப் பற்றி நிறைய கூறியிருக்கிறார்.
ஏன் தனது திருமணத்தை கூட அம்மா-அப்பா பார்த்தவரை தான் செய்தார், ஆனால் பிரச்சனையில் முடிந்தது. இதுவரை நடிகர் பிரசாந்த் அம்மாவை யாரும் பார்த்தது இல்லை, தற்போது நடிகரின் திருமணத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் அவரது அம்மா இருக்கிறார். அந்த புகைப்படம் வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!