• Sep 22 2023

பிரபாவிடம் கைவசமாக சிக்கிக் கொண்ட ஐஸ்வர்யா மற்றும் கௌதம்- மகாவுக்கு தெரிந்த உண்மை - பரபரப்பான ப்ரோமோ

stella / 1 month ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் ஆஹா கல்யாணம். இந்த சீரியல் காட்சோரா என்னும் பெங்காலி தொடரின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும். இதில் முக்கிய கதாபாத்திரமாக மௌனிகா, விக்ரம் ஸ்ரீ, அக்ஷய கந்தமுதன், காயத்ரி ஸ்ரீ ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியலில் அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளையை தங்கச்சி கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து கொள்கின்றார். இவ்வாறு வசதியான இடத்தில் அவர் திருமணம் செய்து கொள்வதால் மாப்பிள்ளை வீட்டில் அந்தப் பெண் என்னெனன்ன கஷ்டங்களை அனுபவிக்கின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.


மேலும் ஐஸ்வர்யா யாரைக் கூட்டிக்கொண்டு ஓடினார் என்று மகாவும் பிரபாவும் கண்டு பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கின்றனர். இப்படியான நிலையில் ஐஸ்வர்யா கௌதமுக்கு போன் பண்ணி வீட்டில எல்லோரும் கோயிலில் நிற்கிறாங்க நாங்க ரெண்டு பேரும் ரொமான்ஸ் பண்ணுவோம் என்று சொல்கின்றார்.

இதனால் ஐஸ்வர்யாவும் கௌதமும் ஒரு இடத்தில் களவாக சந்திப்பதைப் பார்த்த பிரபா மகாவுக்கு போன் பண்ணி சொல்கின்றார்.இதனால் ஐஸ்வர்யா கௌதமைத் தான் காதலிக்கின்றார் என்ற விஷயம் கௌம் வீட்டிற்குத் தெரிய வருமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement