• May 20 2024

KGF-2 வெற்றிக்கு பிறகு சம்பளத்தை உயர்த்திய நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி.. !

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி உலகளவில் மிகப்பிரமாண்டமான முறையில் வெளிவந்த திரைப்படம் கே.ஜி.எப் 2.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து மாபெரும் எதிர்பார்ப்பில் இப்படம் வெளிவந்தது. அதே போல், ரசிகர்களின் முழு எதிர்பார்ப்பையும் இப்படம் பூர்த்தி செய்தது என்று தான் கூற வேண்டும்.

அத்தோடு , இதுவரை உலகளவில் 1,200 கோடி ரூபாயை கடந்து வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது கே.ஜி.எப்.

இந்நிலையில், இப்படத்தின் வெற்றியின் காரணமாக, இப்படத்தில் இயக்குநர், ஹீரோ என இருவரும் தங்களது சம்பளத்தை அடுத்தடுத்த படத்தை உயர்த்தியுள்ளனர் என தகவல் வெளியான நிலையில் மற்றுமொரு தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது இவர்களை தொடர்ந்து லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, கே.ஜி.எப் பட வெற்றிக்கு பிறகு ரூ. 2 கோடியாக தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement