• Apr 30 2024

பிரபல நடிகரின் படத்தை தயாரிக்கும் நடிகை ராதிகா-முக்கிய வேடத்தில் சரத்குமார்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் சிரஞ்சீவி.இவர் நடிக்கும் பல படங்கள் ஹிட் கொடுத்துவிடும்.

அந்த வகையில் இவர் இரண்டாம் நிலை விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றதோடு 7 முறை பிலிம்பேர் விருதைப் பெற்ற ஒரே தெலுங்குத் திரைப்பட நடிகர் விளங்குகின்றார்.

இவர் இறுதியாக நடித்த ஆச்சார்யா திரைப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து அவர் நடிக்கும் காட்பாதர், போலோ சங்கர் மற்றும் இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்களிலும் சிரஞ்சீவி நடிக்கிறார்.

இந்தநிலையில் சிரஞ்சீவி நடிப்பில் புதிய படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக ஒரு தகவலை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ராதிகா

மேலும் இதுபற்றி அவர் கூறும்போது, “எங்களுடைய ராடன் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதற்காக அன்பு சிரஞ்சீவிக்கு நன்றி. மாஸ் மன்னனான சிரஞ்சீவியுடன் இணைந்து பிளாக்பஸ்டர் படத்தை உருவாக்குவதற்கு காத்திருக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார். அத்தோடு இந்த படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் என்றும் தெரிகிறது

எண்பது, தொண்ணூறுகளில் சிரஞ்சீவியுடன் இணைந்து பல தெலுங்கு படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் ராதிகா. அதுமட்டுமல்ல 90களின் நட்சத்திர சங்கமத்தில் அடிக்கடி சந்திப்பு நிகழ்த்தியும் ராதிகா தங்களது நட்பை பலப்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement