• Sep 08 2024

ஒரே குடும்பத்தின் 4 தலைமுறை பெண்கள்.. சூப்பர் புகைப்படத்தை வெளியிட்ட சூர்யா, கார்த்தி பட நடிகை..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர்கள் கார்த்தி, சூர்யா உட்பட பல பிரபலங்களுடன் நடித்த நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குடும்பத்தில் 4 தலைமுறை பெண்களின் புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் நடிகைகளின் ஒருவரான பிரணிதா சுபாஷ் கடந்த 2011 ஆம் ஆண்டு அருள்நிதி நடித்த ’உதயன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் அவர் கார்த்தி நடித்த ’சகுனி’ சூர்யா நடித்த ’மாஸ் என்ற மாசிலாமணி’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கூட அவர் ஒரு மலையாள மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை பிரணிதா கடந்த 2021 ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி நிதின் ராஜு என்ற தொழில் அதிபரை திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெண் குழந்தை பிறந்தது. நடிகை பிரணிதா அவ்வப்போது தனது குழந்தையின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வந்த நிலையில் தற்போது அவர் தனது குடும்பத்தின் நான்கு தலைமுறை பெண்கள் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


தனது பாட்டி, அம்மா மற்றும் மகளுடன் தான் இருக்கும் புகைப்படத்தை அவர் பதிவு செய்து எங்கள் குடும்பத்தின் நான்கு தலைமுறை பெண்கள் என கேப்ஷனாகவும் பதிவு செய்துள்ளதை அடுத்து அவரது புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.



திருமணத்திற்கு பின்னர் நடிப்பில் பெரிதாக ஆர்வம் காட்டாத பிரணிதா சுபாஷ் தற்போது பிசினஸ் செய்து வருகிறார் என்பதும் பெங்களூரில் அவர் சொந்தமாக ஓட்டல் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement