• May 20 2024

“நான்செட்டில்ஆகிட்டேன் சம்பாதித்து மகிழ்ச்சியாக இருக்கிறேன்"- பளிச் என்று பதில் சொன்ன நடிகை கியாரா

stella / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய திரைப்பட நடிகையான கியாரா அத்வானி கடந்த 2014 ஆம் ஆண்டு "புக்லி " என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து நடிகை கியாரா எம்.எஸ்.தோனி, லஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் பரத் அனே நேனு போன்ற படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.

மேலும் இவர் ராம் சரணுடன் "வினயா வித்யா ராமா" என்ற திரைப்படத்தில் நடித்தார்.இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது கியார அத்வானி இயக்குநர் ராஜ் மேத்தா இயக்கத்தில் "ஜக் ஜக் ஜீயோ " என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இப்படம் வரும் ஜூன் 24 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் பல நட்சத்திர நடிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.அப்போது நடிகர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் கியாரா அத்வானியிடம் செட்டில் ஆகி திருமணம் செய்து கொள்வது பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் "கல்யாணம் இல்லாமல் செட்டில் ஆகலாம், நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.நான் செட்டில் ஆகிட்டேன்.சம்பாதித்து மகிழ்ச்சியாக இருக்கிறேன்." என்று பதில் அளித்துள்ளார்.

இந்நிலையில் தனது திருமணம் மற்றும் உறவு குறித்தபத்திரிகையாளர் கேள்விக்கு பளிச் பதில் அளித்துள்ளார். அதாவது கியாரா அத்வானி நீண்ட காலமாக சித்தார்த் மல்ஹோர்த்ராவுடன் என்பவருடன் ''லிவிங் டூ கெதர்'' உறவில் இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. தற்போது இதற்கும் சேர்த்து கியாரா அத்வானி முற்றுபுள்ளி வைத்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement