• Sep 20 2024

இந்தியில் ரீமேக் ஆகும் நடிகர் அருள்நிதியின் திரைப்படம்…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் பாண்டியராஜனின் வம்சம் திரைப்படத்தின் மூலம் காதநாயகனாக அறிமுகமானவர் தான் அருள்நிதி.இவர் அதிக படங்கள் நடிக்காவிட்டாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் என்று தான் கூற வேண்டும்.

இரவுக்கு ஆயிரம் கண்கள், டிமாண்டி காலனி, கே-14 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் அருள்நிதி.

இவ்வாறு இருக்கையில் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள 'தேஜாவு' திரைப்படம் இந்தியில் ரீமேக் இருப்பதாக கூறப்படுகிறது.அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் அருள்நிதி ‘தேஜாவு’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளார்.

மதுபாலா, காளி வெங்கட், ராகவ் விஜய், மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் அருள்நிதி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மேலும் இப்படத்தை விஜய் பாண்டியின் ஒயிட் கார்ப்பெட் பிலிம்ஸ் மற்றும் பிஜி முத்தையா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் வரும் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட படத்தின் இயக்குனர் "தேஜாவு படத்தின் கதையை 2015 ஆம் ஆண்டேஉருவாக்கி விட்டதாகவும் ஆனால் அவருடைய நண்பர்கள் கதையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை யூகித்துவிட்டதால் கதையை மீண்டும் மாற்றி எழுத அவருக்கு 4 வருடங்கள் எடுத்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில்முழு படமும் ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் ஆக இருக்க வேண்டும் என்பது அவருடைய எண்ணமாக இருந்திருக்கிறது.மேலும் இந்தியில் விவேக் மற்றும் ஜாக்கி ஷ்ராப் ஆகியோர் நடிப்பில் தேஜாவு படத்தை ரீமேக் செய்ய இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் தமிழில் படம் ரிலீஸ் ஆன உடனே ரிலீஸ் இந்தி ரீமேக்கிற்கான வேலைகளை தொடங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement