• Apr 26 2024

மூன்றாவது மனைவியுடன் மெக்காவிற்கு பயணம் செய்த யுவன்... தீயாய் பரவும் புகைப்படம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் யுவன் சங்கர் ராஜா. இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. தன்னுடைய இசையினால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட யுவன் சங்கர் ராஜா கடந்த 2005-ஆம் ஆண்டு சுஜயா சந்திரன் எனும் தனது தோழியை திருமணம் செய்து கொண்டார். 


ஆனாலும் அந்த திருமண வாழ்க்கை நீண்ட காலத்திற்கு நீடிக்கக்கவில்லை. அதாவது 2008 இல் இருவரும் பிரிந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு திருப்பதியில் ஷில்பா மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த உறவும் அதிக ஆண்டுகள் நீடிக்கவில்லை. குறிப்பாக 2014-ஆம் ஆண்டில் ஷில்பாவையும் பிரிந்தார். 

இவ்வாறாக 2திருமண வாழ்க்கையிலும் தோல்வியைக் கண்ட யுவன் பின்னர் 2015 இல் ஜஃப்ரூன் நிஷா என்ற முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஸியா யுவன் எனும் ஒரு அழகிய மகள் உள்ளார்.


இதனைத் தொடர்ந்து கடந்த 2014-ஆம் ஆண்டு தான் இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேன் என அதிரடியாக யுவன் சங்கர் ராஜா அறிவித்தது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இளையராஜா இன்னமும் இந்து மதத்தின் மீது தீவிரமான பற்றுக் கொண்டுள்ள நிலையில், யுவன் இஸ்லாமிய மதத்துக்கு மாறியது குடும்பத்திலும் ஒரு சில பிரச்சனைகளை ஏற்படுத்தியது. 


மேலும் அப்துல் ஹாலிக் என்று தனது பெயரை யுவன் மாற்றிக் கொண்டாலும், சினிமாவுக்காக இன்றுவரை யுவன் சங்கர் ராஜா எனும் பெயரையே பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இஸ்லாமியர்களின் புனித பூமியாக கருதப்படும் மெக்காவிற்கு சென்றுள்ள யுவன் சங்கர் ராஜாவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement