தமிழ் சினிமாவில் புதுமணத் தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
"நானும் ரவுடி தான்" படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து இன்று வரை 07-ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் கடந்த 09-ஆம் திகதி மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திரக் ஹோட்டலில் இவர்கள் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
இதில் கோலிவூட் முதல் பாலிவூட் வரை ஏராளமான திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இத்திருமணத்திற்கு பிரபல மலையாள நடிகர் திலீப்பும் வந்து கலந்து கொண்டிருந்தார்.ஆனால் இவரை நயன்தாரா தனது திருமணத்திற்கு அழைத்திருந்தமை நயன்தாராவின் ரசிகர்களுக்குப் பிடிப்பிக்கவில்லை.
ஏனெனில் இவர் ஏற்கெனவே பிரபல மலையாள நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஜாமீனில் வெளியே வந்த திலீப் தற்போது மீண்டும் பிரச்சனையில் சிக்கியுள்ளார்.
இந்நிலையில் நயன்தாராவின் திருமணத்திற்கு திலீப் வந்ததை பார்த்த ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.
என்ன தான் நயன்தாரா கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும் திலீப்பை தானா திருமணத்திற்கு அழைக்க வேண்டும்? எதற்காக திலீப்பை அழைக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனால் ரசிகர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நயன்தாரா.
பிற செய்திகள்
- தளபதி 67 படத்தில் விஜய்க்கு இப்படி ஒரு கதாபாத்திரமா ? வெளியான தகவல்..!
- ராதிகாவின் நம்பரை பார்த்ததும் பாக்யாவுக்கு வந்த சந்தேகம் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்
- நடன இயக்குநர் சாண்டியின் மகனை பார்த்துள்ளீர்களா..?லேட்டஸ்ட் புகைப்படம்..!
- சமந்தா கட்டியிருக்கும் மஞ்சள் நிற புடவையின் விலை இவ்ளோ காஸ்ட்லியா..? வாயடைத்துப்போன ரசிகர்கள்.!
- “விஜய்யின் முகம் பூனை குடும்பத்தை சேர்ந்தது..” பிரபல இயக்குநர்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!